search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் படகு விபத்து
    X
    பாகிஸ்தான் படகு விபத்து

    பாகிஸ்தான்: 40 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 8 பிரேதங்கள் மீட்பு

    பாகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று 40 பேருடன் சென்ற படகு சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 8 பிரேதங்களை மீட்பு படையினர் கரை சேர்த்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் இன்று சுமார் 40 பேருடன் சட்லெஜ் ஆற்றில் சென்ற படகு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் 8 பிரேதங்களை கரை சேர்த்தனர்.

    மீட்புப் படகு

    உள்ளூர் மக்களின் உதவியுடன் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×