என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளம் சென்ற ஜி ஜின்பிங்-ஐ அதிபர் பித்யா தேவி பண்டாரி வரவேற்றார்
Byமாலை மலர்12 Oct 2019 1:49 PM GMT (Updated: 12 Oct 2019 1:49 PM GMT)
இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.
காத்மாண்டு:
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர், சென்னையில் இருந்து சீன அதிபர் தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் நேபாளம் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு சிகப்பு கம்பளத்துடன் கூடிய வரவேற்பின்போது முப்படையினரின் அணிவகுப்பை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.
நேபாளம் அதிபர் பித்யா தேவி பண்டாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை சந்திக்கும் ஜி ஜின்பிங் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் மற்றும் நேபாளத்துக்கு இடையில் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லைப்பகுதியில் திபெத் விடுதலைக்காக போராடிவரும் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.
இவர்களில் சிலரை சீனாவுக்கு நாடு கடத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர், சென்னையில் இருந்து சீன அதிபர் தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் நேபாளம் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை நேபாளம் சென்றடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.
அங்கு சிகப்பு கம்பளத்துடன் கூடிய வரவேற்பின்போது முப்படையினரின் அணிவகுப்பை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.
நேபாளம் அதிபர் பித்யா தேவி பண்டாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை சந்திக்கும் ஜி ஜின்பிங் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் மற்றும் நேபாளத்துக்கு இடையில் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லைப்பகுதியில் திபெத் விடுதலைக்காக போராடிவரும் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.
இவர்களில் சிலரை சீனாவுக்கு நாடு கடத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X