என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு
Byமாலை மலர்24 Aug 2019 5:31 PM GMT (Updated: 24 Aug 2019 5:31 PM GMT)
பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி-7 மாநாட்டின்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸ்:
உலகின் ஏழு நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு ஜி 7 என அழைக்கப்படுகிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்த ஜி-7 அமைப்பின் 45-வது மாநாடு இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பையாரிட்ஸ் நகரில் இன்று தொடங்கி வரும் திங்கள் கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டின் நோக்கமாக உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜி-7 மாநாடு நடைபெறும் பையாரிட்ஸ் நகரில் 9000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X