என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் புயல் எச்சரிக்கை: விமான சேவை ரத்து
Byமாலை மலர்14 Aug 2019 1:27 PM GMT
ஜப்பான் நாட்டில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 200-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கார்ஷோ என்ற புயல் உருவாகியுள்ளது. அப்புயல் நாளை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 144 கி.மீ வேகத்தில் கனமழையுடன் கூடிய பயங்கர காற்று வீசும் என தெரிவித்தது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டோக்கியோ, நகோயா மற்றும் ஒசாகா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 222 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X