search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் தீப்பற்றி எரியும் காட்சி (பழைய படம்)
    X
    கார் தீப்பற்றி எரியும் காட்சி (பழைய படம்)

    மேற்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: மாவட்ட கலெக்டர் உள்பட இருவர் பலி

    ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு ஹெராத் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது பாதுகாவலரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஹெராத் மாகாணத்தில் உள்ளது சிந்தா ஜன் மாவட்டம். இம்மாவட்டத்தின் கலெக்டர் ஷுகுருல்லா சகிர், சிந்தா ஜன் மாவட்ட பகுதியில் உள்ள தாரா கில் பகுதியில் இன்று நண்பகலில் நிகழந்த குண்டுவெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அவருக்கு பாதுகாப்பாக சென்றவரில் ஒரு பாதுகாவலரும் கொல்லப்பட்டார். மேலும் மாவட்ட முதன்மை பாதுகாவலர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  தலிபான் கும்பல் இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×