என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து
Byமாலை மலர்19 July 2019 3:36 AM GMT (Updated: 19 July 2019 3:36 AM GMT)
மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பேருந்து சாலையோரம் தலைகிழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் அகஸ்காலியன்ட்ஸ் மாநிலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பேருந்து புறப்பட்டுச் சென்றது.
மலைப்பாங்கான நயாரித் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து வேகமாக சென்ற பேருந்து, திடீரென சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
பேருந்து கடுமையாக சிதைந்திருந்ததால், பல மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X