என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்17 July 2019 4:29 PM GMT (Updated: 17 July 2019 4:29 PM GMT)
பல்கேரியா நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்கேரியா:
ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பல்கேரியா. அந்நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் கணினி தகவலை ஹேக் செய்து தகவலை திருடியதாக 20 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்கேரியாவின் ஷோபியா நகரில் செயல்பட்டுவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக இருந்த 20 வயது வாலிபர் ஒருவர் நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடிய குற்றத்திற்காக அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
தேசிய வருவாய் அமைப்பில், நாட்டின் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X