என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி
Byமாலை மலர்5 July 2019 12:34 PM GMT (Updated: 5 July 2019 12:34 PM GMT)
அமெரிக்காவின் பஹாமா தீவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நிலக்கரி சுரங்க அதிபர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் பஹாமா தீவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று புளோரிடா மாநிலத்துக்கு புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் நிலக்கரி சுரங்க அதிபருமான கிரீஸ் கிரைன் மற்றும் அவரது மகள் உள்பட மொத்தம் 7 பேர் பயணித்தனர்.
கிராண்ட் கே என்ற தீவு பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கடலுக்குள் விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், மீட்பு குழு வருவதற்கு முன்னர் ஹெலிகாப்டரில் இருந்த கிரீஸ் கிரைன் மற்றும் அவரது மகள் உள்பட அனைவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைபற்றிய மீட்பு படையினர் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X