என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு
Byமாலை மலர்22 Jun 2019 2:42 AM GMT (Updated: 22 Jun 2019 2:42 AM GMT)
லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார்.
லண்டன் :
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்? என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டை சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்வானார்கள். இதற்கான ஓட்டெடுப்பு 15-ந்தேதி நள்ளிரவில் நிறைவடைந்தது.
நிறைவாக 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். 29.9 சதவீத ஓட்டுகளை பெற்று விளாடிமிர் புதின் 2-வது இடத்தையும், 21.9 சதவீத ஓட்டுகளை பெற்று டிரம்ப் 3-வது இடத்தையும், 18.1 சதவீத ஓட்டுகளை பெற்ற ஜின்பிங் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
இதையடுத்து பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகையின் ஜூலை 15-ந்தேதி இதழ் அட்டைப்பக்கத்தில் மோடியின் படம் இடம்பெற உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்? என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டை சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்வானார்கள். இதற்கான ஓட்டெடுப்பு 15-ந்தேதி நள்ளிரவில் நிறைவடைந்தது.
நிறைவாக 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். 29.9 சதவீத ஓட்டுகளை பெற்று விளாடிமிர் புதின் 2-வது இடத்தையும், 21.9 சதவீத ஓட்டுகளை பெற்று டிரம்ப் 3-வது இடத்தையும், 18.1 சதவீத ஓட்டுகளை பெற்ற ஜின்பிங் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
இதையடுத்து பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகையின் ஜூலை 15-ந்தேதி இதழ் அட்டைப்பக்கத்தில் மோடியின் படம் இடம்பெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X