என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனடாவில் கைதான சீன நிறுவன நிதித்துறை அதிகாரி ஜாமினில் விடுதலை
Byமாலை மலர்12 Dec 2018 10:10 AM GMT (Updated: 12 Dec 2018 10:10 AM GMT)
அமெரிக்காவின் அழுத்தத்தின்பேரில் கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவன நிதித்துறை தலைமை அதிகாரி மெங் வான்ஜவ் ஜாமினில் விடுதலையானார். #Canadiancourt #HuaweiCFO #MengWanzhou
ஒட்டவா :
சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.
அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைதான உடன் உடல்நலக்குறவை காரணம் காட்டி மெங் வான்ஜவ் மருத்துவமனையில் சேர்ந்தார்.
அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தது.
இந்த வழக்கில் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்துவந்த நிலையில், மெங் வான்ஜவ்-ஐ விடுதலை செய்து வான்கோவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி கனடா டாலர்கள் பிணைத்தொகை மற்றும் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். வான்கோவர் நகரில் உள்ள அவரது ஒரு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.
செல்லும் இடங்களை அடையாளம் காட்டும் ‘ஜி.பி.எஸ்.’ பட்டையை கையில் அணிந்திருக்க வேண்டும். என்ற நிபந்தனைகளுடன் அவரை ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். #Canadiancourt #HuaweiCFO #MengWanzhou
சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.
அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைதான உடன் உடல்நலக்குறவை காரணம் காட்டி மெங் வான்ஜவ் மருத்துவமனையில் சேர்ந்தார்.
அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தது.
சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங் வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்தது. மெங் வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட தெரிவித்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் வான்கோவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கில் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்துவந்த நிலையில், மெங் வான்ஜவ்-ஐ விடுதலை செய்து வான்கோவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி கனடா டாலர்கள் பிணைத்தொகை மற்றும் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். வான்கோவர் நகரில் உள்ள அவரது ஒரு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.
செல்லும் இடங்களை அடையாளம் காட்டும் ‘ஜி.பி.எஸ்.’ பட்டையை கையில் அணிந்திருக்க வேண்டும். என்ற நிபந்தனைகளுடன் அவரை ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். #Canadiancourt #HuaweiCFO #MengWanzhou
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X