search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரங்கல்
    X

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரங்கல்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜப்பானின் நல்ல நண்பர் என குறிப்பிட்டு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPAtalBihariVajpayee #ShinzoAbe

    டோக்யோ :

    டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், மறைந்த வாஜ்பாய்க்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பை மத்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ஜப்பானின் நல்ல நண்பர் வாஜ்பாய், அவரது மறைவை கேட்டு தாம் மிகவும் வேதனையடைந்ததாக ஷின்சோ அபே குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-

    வாஜ்பாய் மறைவினால் வாடும் இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்கள் மற்றும் அரசின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

    கடந்த 2001-ம் ஆண்டு ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வாஜ்பாய் இருநாட்டு உறவுகள் மேம்பட மிக முக்கிய பங்காற்றினார். 

    தற்போதுள்ள இந்தியா-ஜப்பான் நல்லுறவுக்கு அடித்தளமாக விளங்கியவர் வாஜ்பாய், அவரது ஆத்மா சாந்தி அடைய இதயத்தின் அடித்தளத்தில் இருந்து இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

    இவ்வாறு ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். #RIPAtalBihariVajpayee #ShinzoAbe

    Next Story
    ×