என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
Byமாலை மலர்5 May 2018 3:06 AM GMT (Updated: 5 May 2018 3:06 AM GMT)
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். #GeorgeHWBush
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 93). இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார். மனைவியின் இறுதிச்சடங்கின் போது புஷ் திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.
இதனை அடுத்து, ஹாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரத்த தொற்றால் பாதிக்கப்பட்ட அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் புஷ் இருப்பார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #GeorgeHWBush
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X