என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1000 மடங்கு வீரியம் கொண்ட நோய் எதிர்ப்பு மருந்து: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்1 Jun 2017 9:24 AM GMT (Updated: 1 Jun 2017 9:25 AM GMT)
அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து முன்பு இருந்ததை விட 1000 மடங்கு வீரியம் கொண்டதாக இருக்கிறது.
நியூயார்க்:
நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இந்த மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகப்படுத்தி நோய்க்கு காரணமான கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும்.
சில நோய்களுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தகைய நோய்களை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கிதான் குணப்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொடுக்கும்போதும் அந்த மருந்துக்கு கட்டுப்படாத வகையில் வீரியமான கிருமிகள், பாக்டீரியாக்கள் உடலில் உற்பத்தியாகி விடுகின்றன.
அப்படி வீரியம் அடையும்போது, இன்னும் வீரியம் கொண்ட மருந்தை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கிருமிகளுடைய வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது புழக்கத்தில் உள்ள நோய் எதிர்ப்பு மருந்துகளால் அந்த கிருமிகளை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
2050-ம் ஆண்டுவாக்கில் மிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படும். ஒரு நொடிக்கு ஒருவர் இறந்து கொண்டே இருப்பார் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எனவே வீரிய சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தைவிட இப்போது கிருமிகள் வீரிய சக்தி பெற்றுவிட்டன. எனவே அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மருந்து இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இந்த மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகப்படுத்தி நோய்க்கு காரணமான கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும்.
சில நோய்களுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தகைய நோய்களை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கிதான் குணப்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொடுக்கும்போதும் அந்த மருந்துக்கு கட்டுப்படாத வகையில் வீரியமான கிருமிகள், பாக்டீரியாக்கள் உடலில் உற்பத்தியாகி விடுகின்றன.
அப்படி வீரியம் அடையும்போது, இன்னும் வீரியம் கொண்ட மருந்தை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கிருமிகளுடைய வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது புழக்கத்தில் உள்ள நோய் எதிர்ப்பு மருந்துகளால் அந்த கிருமிகளை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
2050-ம் ஆண்டுவாக்கில் மிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படும். ஒரு நொடிக்கு ஒருவர் இறந்து கொண்டே இருப்பார் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எனவே வீரிய சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தைவிட இப்போது கிருமிகள் வீரிய சக்தி பெற்றுவிட்டன. எனவே அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மருந்து இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X