என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
    • கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணி 214 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.

    முன்னதாக கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).

    ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.

    தொடர்ந்து தொடர்ந்து சொதப்பும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
    • இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆர்யா

    ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  

    தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது. 

    படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..

    இந்நிலையில், முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டது.

    • படையப்பா படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
    • படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    இந்நிலையில் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாளான நாளை படையப்பா படம் ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

    இதனை முன்னிட்டு படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், படையப்பா திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு நேர்காணலின் BTS காட்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

    • உறுதியாகும் தவெக-பாமக கூட்டணி?
    • திமுக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நீண்டநாட்களாக வைத்து வருகிறது. இதனை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி பாகம மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க உள்ளது.

    இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவிற்கு அழைத்து விடுத்துள்ளது பாமக. இதற்கான அழைப்பு கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு இன்று வழங்கினர்.

    மேலும் தவெக சார்பில் விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பலரும் தவெக-பாமக கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றன.  

    டிசம்பர் 17 அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுகவைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பாமக அழைப்பு அனுப்பியுள்ளது. 

    • ஒரு கூட்டு உயர்நிலைக் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் வலியுறுத்தினார்.
    • மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்து ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டும்

    கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இன்று அம்மாவட்டத்தின் மீனவ சமூகங்களைப் பாதிக்கும் அவசரப் பிரச்சினைகளை எழுப்பி, அதற்கு உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடி, நம்பகமான ஆழ்கடல் தகவல் தொடர்பு அமைப்பு இல்லாதது மற்றும் தற்போதைய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள்" ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

    மீன்பிடித்தலுக்கும் விவசாயத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளைச் சட்டங்கள் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை என்றும், இது முரண்பாடுகளை உருவாக்கி கடலோரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், இந்தியாவின் மீனவ சமூகங்களின் தனித்துவமான சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் யதார்த்தங்களை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

    இதற்காக கடல்சார் விஞ்ஞானிகள், சமூகப் பொருளாதார மற்றும் சட்ட வல்லுநர்கள், கடலோர பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு உயர்நிலைக் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

    அந்தக் குழுவானது மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்து ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டும். தற்போதுள்ள கடல்சார் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும், மேலும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அறிவியல் அடிப்படையிலான, பங்கேற்பு சீர்திருத்தங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு நீண்ட கால செயல் திட்டம் அவசியம் என்றும், கடலோர வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதிலும் அக்குழுவின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.




    • கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்
    • எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார்.

    'நாட்டு மக்களுக்கு ஓர் முக்கியச்செய்தி' எனக்கூறி முக்கிய அறிவிப்புகளை மேளம் அடித்து பொதுமக்களிடம் தெரிவிப்பர் அரண்மனை ஊழியர்கள். அதுபோல கடந்த ஆகஸ்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிடுகிறார். அவர் தினம் ஒரு பதிவிடுவார். நீங்கள் எதை சொல்கிறீர்கள்? என கேட்பீர்கள்.

    நான் சொல்வது 2025ஐயே திரும்பி பார்க்க வைத்த ஒரு பதிவை. அதாவது 3 வாழைப்பழங்களின் இமோஜை பகிர்கிறார். இதற்கு என்ன அர்த்தம், கூகுள் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதா என காரசார விவாதம் நடைபெறுகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் டிரெண்டிங்கில் இருந்தது.

    "கருவாடு ஒருநாள் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்னும் நம் பழமொழிக்கு ஏற்ப அடுத்த மாதம் முழுவதும் இணையத்தை ஆட்டிப் படைத்தது கூகுளின் 'நானோ பனானா'. அதாவது இந்த நானோ பனானாவில் நமது புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ப்ராம்ட் வேண்டுமோ அதை உள்ளிட்டால், நாம் கேட்டதுபோல நம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, 3டி லுக்கில் கிடைக்கும்.

    இதனால் ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் திரும்பினாலும் NANO BANANA-ன் ஆதிக்கம்தான். சமூக ஊடகங்கள் முழுவதும் ஒரே ஏஐ இமேஜ்கள். 'என்னடா என்னைத் தவிர எல்லாரும் அப்டேட்டா இருக்கீங்க' என்ற அளவு நாம் அதனை பார்த்து வியந்திருப்போம்.


    நடிகை சோனாக்ஷி சின்ஹா

    பெண்கள் புடவை அணிந்துகொண்டு தலையில் பூ வைத்திருக்குமாறும், ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருக்குமாறும் மாறி மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்திருப்பர். இதில் பல பெண்களும் இதற்கு முன்பு புடவை கட்டிக்கூட இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் புடவை கட்டியிருப்பது போலவும், மாடலிங் ஃபோட்டோஷுட் எடுத்திருந்தது போலவும் புகைப்படங்கள். 'போதும்டா சாமி என்னை விட்ருங்க' என்ற அளவிற்கு இணையம் முழுவதும் இந்த டிரெண்ட். 

    ஒரு கட்டத்தில் குதிச்சர கைப்புள்ள என்பதுபோல, பொங்கியெழுந்தனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். நாங்களும் எவ்வளவுதான் தாங்குவது என, ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போல பதிவிட்ட ஃபோட்டோக்களை குறிப்பிட்டு, 'பெரிய நேரு பரம்பரை, சட்டையில் ரோசாப்பூ குத்தாம வெளிய வரவேமாட்டாரு' என்னும் கவுண்டமணி, செந்தில் காமெடி டயலாக்கும், நாம் சொன்னவாறு எடிட்டிங்கில் வரவில்லை என்றால், "படிக்க தெரிஞ்சா படி, தப்பு தப்பா படிச்சி அடிவாங்கி சாகாத சொல்லிட்டேன்" என ஏஐ-ஐ திட்டுமாறு மானஸ்தன் பட சரத்குமார், வடிவேலு பட காமெடியும், "பாஸ் பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பளபளனு இருக்கீங்க" என தலைநகரம் படத்தின் வடிவேலு காமெடி என மறுபக்கம் இணையத்தை தெறிக்கவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். 



    இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒருவன்தான். அவன் வேற யாரும் இல்லை நானோ பனானாவிற்கு முன்பு டிரெண்டான கிப்லி ஆர்ட். சாட்ஜிபிடியிடம் நம் புகைப்படத்தை கொடுத்தால் அனிமேஷன் வடிவில் கிடைக்கும். இதனை உலகம் முழுவதும் பயன்படுத்த தூக்கம் இல்லாமல் தவித்தது ஜாட்ஜிபிடி. ஆம் அனைவரும் தங்களுக்கு அனிமேஷன் புகைப்படம் வேண்டும் என முயற்சிக்க இணையதளமே முடங்கியது. எங்களுக்கும் தூக்கம் வேணும்ல என சாம் ஆல்ட்மேனே கோரிக்கை விடுத்தார். அந்தளவிற்கு இரவு, பகல் என பாராமல் புகைப்படத்தை பதிவேற்றி, எடிட் செய்து வந்தனர் பயனர்கள். ஒருவழியாக இப்போது பெருமூச்சு விட்டு இந்த டிரெண்ட்கள் நார்மலாகி விட்டன. 

    ஆமா, சம்மந்தமே இல்லாமா இப்போ ஏ இத சொல்லிக்கிட்டு இருக்க என பலரும் கேட்கலாம். அது ஒன்றும் இல்லை. புத்தாண்டு வரவிருக்கிறது இல்லையா. அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பார்ப்பதற்கு முன் 2025-ஐ ஒரு ரீவைண்ட் பார்ப்போம். அதற்காகத்தான்.

    • கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்
    • மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலையொட்டிதான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் கொடுக்க அரசு முன்வந்துள்ளது' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், 

    "அவருக்குதான் எப்போதுமே பயம். அவர் இனி வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார். தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார். அவர் எது வேண்டுமானாலும் கூறுவார். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.

    படிக்கின்ற மாணவர்கள் இந்த காலக்கட்டத்திலேயே அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டங்கள். அதை யார் வேண்டுமானாலும் குறை கூறட்டும். அதும் அவர் சொல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை மக்கள் அறிவார்கள். அதனால் அவரது பேச்சு எப்போதும் எடுபடாது." என தெரிவித்தார். 

    • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில்,டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது

    2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

    • தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

    • பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும்.
    • அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காக வழங்கப்பட்டது.

    டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் ஆல்ஃபிரட் நோபல் தனது கண்டுபிடிப்பு மனிதர்களை கொல்ல பயன்படுத்துவது குறித்து வருத்தமடைந்து தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு 1895-இல் நிறுவியதே நோபல் பரிசு. 1896 இல் அவரது மறைவுக்கு பின் அவரின் உயிலின்படி 1901 தொடங்கி வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது உலகின் உயரிய அங்கீகாரமாகக் உருவெடுத்துள்ள நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும். 

    அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 

    அந்த வகையில், இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

    இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.

    உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    László Krasznahorkai

    2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

    பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர், பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.   

    தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.

    இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ -வுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    முன்னதாக  இந்த வருடம் 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வந்தபோதும் அவருக்கு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    ×