என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்களில் 13 ஆயிரம் கோடி மோசடி.
    • கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

    மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி 2018 முதல் 2022 வரை பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 6 வங்கிகளிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

    மெஹுல் சோக்சிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். அவர் பெல்ஜியத்தில் இருப்பது தெரியவந்தது இதனால் அவரை கைது, இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி சிபிஐ பெல்ஜியம் அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அவரது வழக்கு தொடர்பான ஆவணங்களை பெல்ஜியத்திற்கு வழங்கியது.

    இந்த நிலையில்தான் பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவரை கைது செய்ததற்கும், இந்தியாவுக்கு நாடு கடத்தல் கோரிக்கையும் செல்படியானதாகும் என உத்தரவிட்டுள்ளது. என்றபோதிலும், அப்பீல் செய்ய வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

    மெஹுல் சோக்சி நீதிமன்றத்தில் 2017ஆம் அண்டு நவம்பர் மாதம் ஆண்டிகுவா அண்டு பார்படா குடியுரிமை பெற்ற பிறகு, டிசம்பர் 14, 2018-ல் இந்தியாவின் குடியுரிமையை திருப்பி கொடுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.

    • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
    • சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    தீபாவளி திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பாக பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும்படி முதலமைச்சர் உத்தரவிட்டபடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தும், கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்தும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். இன்று கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.

    தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென IRCTC வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • குப்பைத் தொட்டியால் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

    டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    IRCTC ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அவர்கள் குப்பைத் தொட்டிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன் பெல்ட்-ஐ கழற்றி அடித்தனர்.

    இதை பார்த்த பயணிகள் இது IRCTC ஊழியர்களா அல்லது WWE வீரர்களாக என தலையில் அடித்துக் கொண்டு தப்பித்தும் என ஒதுங்கிச் சென்றனர்.

    • இடைக்கால அரசு அரசியல் புதிய சாசனத்தில் கையெழுத்திட்டது.
    • தங்களது கவலைகளை தீர்த்து வைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கோபம்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்

    அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர்.

    புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வருடம் ஷேக் ஹசீனாவை வெளியேற்ற காரணமாக இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தற்காலிக கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு நின்றிருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திடீரென வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலமானார்.

    ஒரு மில்லியன் பயனர்களை எட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது.

    பொழுது போக்கினையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தளம் - பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'They Call Him OG' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த தளம் உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 42 மணி நேரத்தில் 60 நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை அடைந்தது.

    இந்த சாதனை- ஏற்கனவே அறிமுகமான ChatGPT, Instagram,TikTok, Spotify போன்ற உலகளாவிய பிரபலமான தளங்களை விட.. விரைவாக ஒரு மில்லியன் பயனர்களை எட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது.

    அத்துடன் மக்களால் அதிகளவில் விரும்பப்பட்ட சுயாதீன தளமாகவும் OnceMore.io புதிய சாதனையை படைத்திருக்கிறது.

    இந்த தளம் குறித்தும் , இதன் சிறப்பம்சம் குறித்தும், 'OG' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் இயக்குநர் சுஜித் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அதில் இந்த தளத்தின் பிரத்யேகமான உள்ளடக்கத்தை வெளியிடுவதற்காக ரசிகர்களையே 'சிறப்பு விருந்தினர்'களாக அழைப்பு விடுத்தார்.

    இதற்கு ரசிகர்கள் முழு உற்சாகத்தில் பதிலளித்தனர். விளையாட்டுக்கள்- ஒவ்வொரு பயனர்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் அட்டைகள் - தங்களின் உற்சாகத்தின் அனுபவ பகிர்வு - என' OG' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்குள் நுழைவதை அவர்கள் விரும்பினர்.

    இதன் காரணமாக சில மணி நேரங்களுக்குள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மீம்ஸ்கள்- ரசிகர்களின் ரியாக்ஷன்- ரசிகர்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ- புகைப்படங்கள் - அவர்களின் பெயர் மற்றும் பிரத்யேக எண்ணுடன் கூடிய டிஜிட்டல் அட்டைகள் - ஆகியவற்றை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பெருமிதத்துடன் வெளிப்படுத்தினர்.

    இதனால் ரசிகர்களின் டிஜிட்டல் அட்டைகளால் இந்த தளம் நிரம்பி வழிந்தது. அத்துடன் தங்களுடைய பெயர் மற்றும் டிஜிட்டல் எண்ணுடன் கூடிய புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்ஸாக இடம்பெறச் செய்து அதிர வைத்தனர்.

    ரசிகர்கள் கூட்டாக கலந்துகொண்டு 'OG 'திரைப்பட கொண்டாட்டத்தின் பின்னணியை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தையும் தொடங்கினர். அத்துடன் இந்த நிகழ்வை உலகளாவிய திரைப்பட ரசிகர்களின் பங்களிப்புடன் கூடிய மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் மாற்றினர்.

    OnceMore.io - ரசிகர்கள் திரைப்படத்தை பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அதற்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் , அது தொடர்பாக அவர்கள் விரும்பும் கதைகள் மற்றும் உருவாக்கத்தை உடன் இணைத்துக் கொள்ளவும் இதுவரை இல்லாத வகையிலான புதிய பொழுதுபோக்கு சகாப்தத்தை இந்த தளம் உருவாக்கியுள்ளது.

    ஏஐ ( AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் இந்த தளம் - ஏ ஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் புதிய வகையிலான பொழுதுபோக்கினை உருவாக்கி வருகிறது.

    இந்த தளம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை வழங்குவதற்காக மற்றுமொரு பான் இந்திய அளவிலான திரைப்படத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த சாதனை இந்தியாவிற்கு பெருமிதமான தருணமாக அமைந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த புதுமை மற்றும் ரசிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படைப்பாற்றல் இவை இரண்டும் இந்தியாவில் இருந்து தான் வர இயலும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

    • லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம்.
    • மம்தா பானர்ஜி பேரணியில் உரையாற்றுவார் எனத் தகவல்.

    இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

    SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அடுத்த வருடம் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை கடுமையான எதிர்க்கின்றன.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த மாதம் SIR-க்கு எதிராக கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. பேரணி இறுதியில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் தீபாவளியைத் தொடர்ந்து காளி பூஜை, பாய் தூஜ் பண்டிகை வரவிருக்கிறது. இந்த பண்டிகைகள் முடிவடைந்த பின்னர், இந்த பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    • காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.
    • மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

    பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காரைக்கால் நகராட்சி ஆணையர் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப்பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது.

    ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் காலை முதல் வேகம் எடுத்தது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.
    • முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முடிவடைந்தது. இன்று கடைசி நாள் என்பதால், வேட்புமனு தாக்கல் காலை முதல் வேகம் எடுத்தது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.

    பா.ஜ.க. மூத்த தலைவரும் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லால் பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இதுபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இங்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
    • தமிழ்நாடு 14 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.

    இன்று 3ஆவது நாள் ஆட்டமும் தொடங்கியது. இன்றைய ஆட்டத்திலும் தமிழ்நாடு அணி திணறியது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டது.

    ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    • ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே நிலநடுக்கம்.
    • முதற்கட்ட தகவலில் உயிரிச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது.

    கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் 4ஆம் தேதி 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்து. தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

    • இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
    • ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.

    அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.

    தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.

    இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.

    கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல் குறித்த படம்.

    வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இதில், சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார்.

    இப்படி காலம் போக, ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார்.

    இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய் குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார். இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவுகிறார். தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கலப்படமாக மாற்றுவதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார்.

    இதுதொடர்பாக கேட்கும்போது, தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என விவேக் பிரசன்னா கேட்கிறார். அப்போது, வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் சண்டை வருகிறது. இதனால், ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார்.

    கச்சா எண்ணெயை எடுக்க வினயும், விவேக் பிரசன்னாவும் சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறியும் ஹரிஷ் கல்யாண் கடைசியில் என்ன செய்தார்? இருவரையும் எப்படி கையாண்டு, பெட்ரோல், டீசல் பிரச்சனையை தீர்த்தார் என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    ஒரு மாஸ் ஆக்ஷன் திரைக்கதையின் ஹீரோக்கான அத்தனை முயற்சியையும் ஹரிஷ் கல்யாண் முடிந்தவரை செய்திருக்கிறார். படத்திற்கு அவரது பங்களிப்பு சிறப்பு.

    சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யா தனது கதாப்பாத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

    இயக்கம்

    மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடிபதில் பிரச்சனை என முக்கியமான கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. ஒரே படத்தில் அனைத்து பிரச்சனையையும் காட்டியிருக்கிறார். முதல் பாதி வடசென்னை படத்தையும், 2ம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது.

    படம் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வும், ஆங்காங்கே வேகமும் எடுக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிகிறது.

    இசை

    திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு.

    ஒளிப்பதிவு

    படத்தின் ஒளிப்பதிவு பாராட்டலாம். படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    ×