என் மலர்
உலகம்

வங்கதேசத்தில் புதிய சாசனத்தை எதிர்த்து போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு- தடியடி
- இடைக்கால அரசு அரசியல் புதிய சாசனத்தில் கையெழுத்திட்டது.
- தங்களது கவலைகளை தீர்த்து வைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கோபம்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்
அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர்.
புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஷேக் ஹசீனாவை வெளியேற்ற காரணமாக இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தற்காலிக கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு நின்றிருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திடீரென வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலமானார்.






