என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    மீசைய முறுக்கு 2 படத்தையும் சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கின்றனர்.

    "மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம் கதாநாயகன், இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. சுந்தர் சி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய இந்தப் படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக "மீசைய முறுக்கு 2" படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்து இருந்தார்.

    மீசைய முறுக்கு படத்தை போன்றே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்குகிறார்.

    இந்த நிலையில், மீசைய முறுக்கு 2 படத்தின் ரிவீல் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி தமிழா இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், மீசைய முறுக்கு 2 படத்தின் ரிவீல் டீசர் இன்று வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • 2016ல் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை.
    • அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.

    சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து விசாரணை நடக்கும் நிலையில் கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காக சதி நடக்கிறது.

    2016ல் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ப.சிதம்பரத்தை கைது செய்து 100 நாள் சிறையில் வைத்தார்கள், அந்த அமலாக்கத்துறையின் வழக்கு என்னவானது?

    அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஒரு மாத காமலமாக மாவட்டந்தோறும் மகளிரணி, இளைஞரணி, பாக முகவர்கள் மாநாடு என நடத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை (21-ந் தேதி) தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிற தேர்தலில் பாக முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசுகிறார்.

    மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நாளை மேடையேற உள்ளனர். செல்வப்பெருந்தகை, திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

    • ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு.
    • அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது.

    அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.

    கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ரூ.888 கோடி ஊழலில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது.

    அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ரூ.1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது. இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ரூ.365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.

    தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்?

    திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?

    உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அரசன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

    வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்பதுரை கடந்த மாதம் 7-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    இருப்பினும், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் தீவிரமானவை என்பதால், அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. 

    • இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவு.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது.

    இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் ஒரு வழக்கில், "பா.ம.க.. தலைவராக நான்தான் உள்ளேன். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

    அதன்படி, தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது.

    அதனால், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில்,"பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும். நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மதுரைக்கு நாளை காலை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரில் நாளை டிரோன் பறக்க தடை.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஒரு மாத காமலமாக மாவட்டந்தோறும் மகளிரணி, இளைஞரணி, பாக முகவர்கள் மாநாடு என நடத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை (21-ந் தேதி) தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிற தேர்தலில் பாக முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசுகிறார். இதில். அமைச்சர்கள், தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதற்காக உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் கடந்த ஒரு வாரமாக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தி.மு.க. தேர்தல் முகவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டையொட்டி அண்ணா அறிவாலயம் போன்ற அமைப்பில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் அமர்வதற்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மருத்துவ முகாம், ஆம்புலன்சு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் உணவு பார்சல் வழங்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகளும் திடல் அருகே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரைக்கு நாளை காலை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை காலை 11.35 மணிக்கு வடபழஞ்சியில் உள்ள எல்கார்ட் தொழில் நுட்ப பூங்காவில் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். மதியம் 1 மணிக்கு வண்டியூர் கண்மாய் பூங்காவை திறந்து வைப்பதோடு பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மாலையில் காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் 'மறவோம்' நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதனை முடித்து கொண்டு இரவு 7.35 மணிக்கு சென்னைக்கு விமானம் மூலம் புறப்படுகிறார்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரில் நாளை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

    • தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.
    • அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.

    * தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.

    * அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

    * மற்றக்கட்சியினர் கூட்டணி குறித்து அ.தி.மு.க.வினர் ஏன் கவலைப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.
    • நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.

    * மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை இருந்தது.

    * நமக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு.

    * நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

    * கடந்த 5 ஆண்டுகளில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார்.

    கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்றிரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    போஸ்டரில் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் கைகள் ரெட்ரோ தோற்றத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் போதிலும், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன்.
    • சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி.

    * குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.

    * சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×