என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- எத்தனை பேர் குளித்தனர் என்பது குறித்து தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள்
- உ.பி.யின் வளர்ச்சிக்காக இரட்டை எஞ்சின் பாஜக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 'ஆளுநரே திரும்பி போ' (Go Back Governor) என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆனந்திபேசன் படேல் உரையாற்றியபோது, சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 'கோ பேக் கவர்னர்' என்ற முழக்கத்தை எழுப்பினர்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது ஏற்பட்ட மரணங்களுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் மாநில சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்தது. ஆனால் நிர்வாகத்தில் பல தவறுகள் இருந்ததால் பலர் உயிரிழந்தனர்.
அரசு இறப்பு எண்ணிக்கையை கூட வெளியிடவில்லை. எத்தனை பேர் குளித்தனர் என்பது குறித்து தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுக்கிறார்கள் என்று என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசுதோஷ் சின்ஹா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், மார்ச் 5 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.
அமர்வை சுமூகமாக நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பொறுப்பும் கூட. கடந்த 8 ஆண்டுகளில் உ.பி.யின் வளர்ச்சிக்காக இரட்டை எஞ்சின் பாஜக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
முன்னதாக மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி மவுனி அமாவசையை முன்னிட்டு அதிக மக்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தாதாக அரசு தெரிவித்தது. அவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
- இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.
- காதலர் தினத்தை முன்னிட்டு bye bye bhaiya பாடலை இசையமைத்து, பாடி ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாக வெளியிட்டார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராவார். இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இவர் இயக்கி நடித்து தயாரித்து கடந்த ஆண்டு வெளியான கடைசி உலகப் போர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அவ்வபோது மியூசிக் டூரை நடத்தி வருகிறார். உலகமெங்கும் பல நாடுகளில் கான்செர்ட் நிகழ்ச்சிகளை செய்கிறார். சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு bye bye bhaiya பாடலை இசையமைத்து, பாடி ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாக வெளியிட்டார். அதில் யூடியூப் பிரபலம் ஹர்ஷத் கான் நடித்து இருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக ஹிப்ஹாப் ஆதி சிங்கப்பூரில் ஒரு கான்செர்ட் நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அப்பொழுது அவர் அங்கு நடிகர் மற்றும் தொழிலதிபரான நெப்போலியனை சந்தித்தார். அவரை சந்திப்பை குறித்து தற்பொழுது அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் அதே பாசம் ❤️ என் மனம் கவர்ந்த கலைஞர், மனிதர் - எங்கள் அன்பிற்குரிய நெப்போலியன் அண்ணா". இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இவர்கள் இருவரும் அன்பறிவு திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
- இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
8 அணிகள் மோதும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஜெர்சி அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்திய அணி ஜெர்சியில் "சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான்" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என கூறப்பட்டது. எனினும், தற்போது பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சீருடை சார்ந்த ஐ.சி.சி. விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைகா, "சாம்பியன்ஸ் டிராபியில் சீருடை சார்ந்து ஐ.சி.சி. பிறப்பிக்கும் அனைத்து விதிகளையும் பி.சி.சி.ஐ. பின்பற்றும்," என்று தெரிவித்தார்.
ஐ.சி.சி.-யின் சீருடை விதிகளின் படி ஐ.சி.சி. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் அந்த தொடரை நடத்தும் நாட்டின் பெயரை தங்களது ஜெர்சியில் இடம்பெற செய்ய வேண்டும். இது தொடர்பான போட்டிகள் தொடரை நடத்தும் நாட்டை தவிர்த்து பொதுவான இடத்தில் நடந்தாலும், இந்த விதிமுறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. எனினும், இதர காரணங்களால் அதிகாரப்பூர்வ போட்டோஷூட் அல்லது கேப்டன்கள் போட்டோஷூட் நடத்தப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
- சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது.
- விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு ரூ.3.75 கோடி உதவி தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவி தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது. அசைவ உணவு, சத்தான உணவு வழங்கப்படுகிறது. சிறைவாசிகளுக்கு உதவி செய்வதில் தமிழக அரசு முன் மாதிரியாக திகழ்கிறது.
அவர்களது நலனில் அக்கறை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. சிறைக் கூடங்களை தண்டனை இடமாக பார்க்கவில்லை. அது சீர்திருத்த இடமாக பார்க்கப்படுகிறது. விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சிறைவாசிகளுக்கான நலச்சங்கம் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
சிறைவாசிகள் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். இந்த நிதியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செல்லுங்கள். புதிய உலகத்தை பாருங்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பி.கே.சேகர்பாபு , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உயர் அதிகாரிகள் தீரஜ் குமார், மகேஷ்வர் தயாள், கனகராஜ், முருகேசன் மற்றும் சிறை மீண்டோர் நலச் சங்க கவுரவ பொருளாளர் ஞானேஸ்வரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
- 2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார்.
- விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதன் அடுத்தகட்டமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் 6 தளங்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப் போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 12 தளங்களுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப்போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இப்பூங்காக்கள் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இதன்மூலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
- தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறி அது தொடர்பான விவரங்களை பேனர்களாகவும் வைத்திருந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, முன்னாள் எம் .எல்.ஏ. புரசை வி. எஸ். பாபு, பகுதி கழக செயலாளர்கள் வெற்றிலை கே.மாரிமுத்து, பட்மேடு டி.சாரதி, கே.சி. கார்டன் எம். சந்திரசேகர், முகம்மது இம்தியாஸ், வழக்கறிஞர் இஸ்மாயில், துறைமுகம் பயாஸ், சேத்துப்பட்டு எ.சம்பத்குமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி. ஆயிரம்விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வழக்கறிஞர் சதாசிவம். மற்றும் கொளத்தூர் கே.கணேசன், ஆவின் ஆர்.அருள்வேல், லண்டன் எம்.வெங்கடேசன், இனியன், நேரு நகர் எஸ்.கோதண்டன், வில்லிவாக்கம் ஜெய் சுரேஷ், என். கோவிந்தன், ஆதிலட்சுமி, கொளத்தூர் கிருபா, சேத்துப்பட்டு பிரகாஷ், அயன் புரம் சரவணன், மேட்டு தெரு மதன், வட்ட செயலாளர் மாரியப்பன் அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள். தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறி அது தொடர்பான விவரங்களை பேனர்களாகவும் வைத்திருந்தனர்.
- பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.
ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆலோசனையின்போது, குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கவும் அனுமதி தரவும் வாடகை ஆட்டோக்களுக்கான செயலியை அரசு அறிமுகப்படுத்தவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஓலா, உபேர் சேவைக்கு அரசு சார்பில் செயலி உருவாக்க கோரிக்கை விடுத்தனர்.
* சென்னையில் பைக் டாக்சிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும்.
* முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
- இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
- அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. அந்த கட்சி எங்கள் கைக்கு வரும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு. இது போன்ற கொசுக்களை பற்றியெல்லாம் பேசாதீர்கள். அதற்கான நேரமா இது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ரகசியம் இருப்பதாக கூறுகிறார். யாருடன் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதி. இப்படி தி.மு.க.வுடன் தொடர்பில் இருந்து அந்த நோய் அவரை தொற்றிக் கொண்டுள்ளது. தங்கமலை ரகசியமா? இல்லை சிதம்பர ரகசியமா? என்பதை சொல்லி விட்டு போக வேண்டியது தானே?
இப்படியே பேசி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர்களை ஏமாற்றி வந்துள்ளார். இது எடுபடாது. அ.தி.மு.க. எப்போதுமே இரு கொள்கையை கடைபிடிக்கும் கட்சியாகும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
இந்தியை விரும்பி படிப்பது வேறு. திணிப்பது வேறு. திணிப்பதுதான் தவறாகும். எனவே இந்தி தேவையில்லை என்பது எங்கள் கருத்தாகும். தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
- வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவி காலம் இன்று முடிவடையும் நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய வழக்குகளை விசாரித்த பிறகு தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- ரன்வீர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கொஞ்ச காலத்துக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேறக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து ரன்வீர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும் ரன்வீர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆபாசமாக பேசுவது நகைச்சுவை அல்ல, இவ்வழக்கில் எவ்வாறு நிவாரணம் கோரமுடியும்? என்று கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து விசாரணையில் ரன்வீர் முழுமையாக ஒத்துழைப்பார் என்று வாக்குறுதி அளித்தததை அடுத்து இடைக்கால தடையாணை பிறப்பித்து அவரது கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் ரன்வீர் தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதி இன்று வெளிநாடு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்ச காலத்துக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேறக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
- அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- பிரதமர் மோடி வரவேற்று அழைத்து சென்றார்.
கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.
இது மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கத்தார் அமீர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். இதற்காக குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த அமீரை திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துள்ள நிலையில், கத்தார் அமீர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடி அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் முன்னதாக 2015-ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்தியா வந்திருந்தார்.






