search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "concert"

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • இசை நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றார்.

    சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

    அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம். நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறை சார்பில் பொது வெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெய பாரத் ஹோம்ஸ் சார்பில் டைட்டன் சிட்டி தொடக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடக்கிறது
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    மதுரை

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா இன்று (5-ந் தேதி) மாலை நடக்கிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்கிறார்.

    இதுகுறித்து ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். நிர்வாகி ஜெ.நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா, இசைக்கருவி தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா, நாதஸ்வர இசை திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வரவேற்றார்.

    நாதஸ்வர கலைமாமணி கணேசன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய குழு துணை தலைவர்கள் அண்ணாதுரை, பத்மாவதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நாதஸ்வரம் அஞ்சல் உரையை அஞ்சல் மண்டல தலைவர் அப்பா க்கண்ணு கோவிந்தராஜன் வெளியிட அதைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெற்றுக் கொ ண்டார்.முன்னதாக கலைமா மணி மீனாட்சி சுந்தரம், சேஷகோபாலன் சகோத ரர்கள், வித்வான்கள் கார்த்திக், தங்க ராஜா, மனோ கரன், ராதாகிருஷ்ணன், குருநாதன் , ராஜாராமன் ஆகியோர் இணைந்து 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உஷா, ராஜா, பேரூராட்சி தலைவர்கள் புனிதா ஜெயபால் வனிதா ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
    • கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கோவில் விழாவையொட்டி நடந்த பாட்டு கச்சேரியில் ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    வில்லியனூர் அருகே அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது23). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் நின்று ராம்குமார் பாட்டி கச்சேரியை ரசித்துகொண்டிருந்த போது அங்கு வந்த கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ராம்குமாரிடம் இங்கு நிற்க வேண்டாம் எனது மகன்களுக்காக இடம் பிடித்து வைத்திருக்கிறேன். எனவே இங்கிருந்து சென்று விடு என வெங்கடேசன் கூறினார்.

    அதற்கு ராம்குமார் நான் இங்கிருந்து செல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் ராம்குமாருக்கும், வெங்கடேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன் செல்போனில் பேசி தனது மகன்களான தினகரன் மற்றும் விஜயகுமாரை அழைத்தார்.

    இதையடுத்து சற்று நேரத்தில் தினகரன், விஜயகுமார் மற்றும் அவருடன் மற்றொருவர் அங்கு வந்தனர். அவர்கள் ராம்குமாரிடம் எங்கள் ஊரில் வந்து எங்களது அப்பாவிடமே தகராறு செய்கிறாயா? என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    இதனை ராம்குமார் தட்டிக்கேட்ட போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராம்குமாரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் வெங்கடேசன் அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராம்குமாரின் தலையில் குத்தினார். அதோடு ராம்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ராம்குமார் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
    • துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதனை பலர் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் இசை ரசிகர்கள் மீ து சரமாரியாக சுட்டான். இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×