என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
- மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

- உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.
- சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார்
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர் 27 வயதான சச்சின். கடந்த சனிக்கிழமை அன்று இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.
ஓட்டல் ஊழியர் அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சச்சின் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. சமீப காலங்களாக இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமூக பிரச்சனையாக மாறியுள்ளது.
- அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
- 'குடும்பஸ்தன்' திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளிவருகிறது.
அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
விடாமுயற்சி:
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இம்மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

குடும்பஸ்தன்:
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக குடும்பஸ்தன் படம் கையாண்டது. இந்நிலையில், இப்படம் வரும் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ரேகா சித்திரம்:
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ரேகாசித்திரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், ரேகாசித்திரம் திரைப்படம் வரும் 7 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சங்கராந்திகி வஸ்துனம்:
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான வெங்கடேஷ் நடிப்பில் உருவான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது.
ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து 2025 ஆம் ஆண்டின் தெலுங்கு சினிமாவின் முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை சங்கராந்திகி வஸ்துனம் பதிவு செய்தது. இந்நிலையில், சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தண்டேல்:
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படம் உலகளவில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 7 ஆம் தேதி நெபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடிகர் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராஜாகிளி திரைப்படம் . இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கினார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை அனைத்தையும் தம்பி ராமையா மேற்கொண்டார். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த வருட ஐபிஎல் இன் போது டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுபெற்றார்.
- இந்த ஆண்டு நான் அணியை வழிநடந்த போவதில்லை - நீதான் கேப்டன்
ஐபிஎல் போட்டிகளில் களமாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர முகம் எம்.எஸ். டோனி. கடந்த வருட ஐபிஎல் இன் போது டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுபெற்றார்.
இந்நிலையில் கேப்டன்சி கைமாறியது குறித்து ருதுராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு ஐபில் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எம்.எஸ். டோனி என்னிடம் வந்து, 'இந்த ஆண்டு நான் அணியை வழிநடந்த போவதில்லை - நீதான் கேப்டன்' என்றார்.

முதல் ஆட்டத்தில் இருந்தே நான்தான் வழிநடத்த வேண்டுமா? என கேட்டதற்கு 'இது உன்னுடைய அணி, நீதான் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், நான் இதில் தலையிட மாட்டேன்.
ஃபீல்டிங்கில் 50% நீயும் 50% நானும் பார்த்து கொள்ளலாம். இருந்தாலும் என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்றார். அந்த நம்பிக்கை மிகப்பெரியது என்று நெகிழ்ச்சியுடன் ருதுராஜ் பகிர்ந்துள்ளார்.
- 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது.
- மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
பிரபல குளிர்பானங்களான பெப்சி மற்றும் கோகோ கோலா இடையே பல தசாப்தங்களாக போட்டி நிலவி வருகிறது. விளம்பரங்கள் மூலம் இரு நிறுவனங்களும் முந்தைய காலங்களில் மோதிக்கொண்டன.
இரு நிறுவனங்களின் மோதலை பலரும் ஆர்வத்துடன் கவனித்து வருவர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருவதை ஒட்டி மீண்டும் பெப்சி மற்றும் கோகோ கோலா விளம்பர போரை தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது.

அதாவது இடைவேளைகளில் கோகோ கோலா அருந்துங்கள் என்பதே அதன் அர்த்தம். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டுள்ள பெப்சி, 'Anytime is Pepsi Time' என்ற விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளது.
அதாவது இடைவேளை வரை எதற்கு காத்திருக்கிறீர்கள், எந்த நேரமும் பெப்சி குடிக்கும் நேரம்தான் என்று இந்த விளம்பரம் உணர்த்துகிறது. மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

- 47 பந்தில் அரைசதம் அடித்த ரச்சின் ரவிந்திரா, 93 பந்தில் சதம் அடித்தார்.
- கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், பி பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.
என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.
ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்த 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடினர். கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் கடக்க, ரச்சின் ரவீந்திரா 93 பந்தில் சதம் அடித்தார். நியூசிலாந்து 32 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.
நியூசிலாந்தின் ஸ்கோர் 33.3 ஓவரில் 212 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 108 ரன்கள் விளாசி ரபடா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.
3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்துள்ளார். கேன் வில்லியம்சன் 80 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்கள் எடுத்ததுடன், ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
என்றாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 325 ரன்கள் குவித்து 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்சாய் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 31 பந்தில் 41 ரன்கள் விளாசினார். மேலும், 9.5 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் சாய்த்தார்.
அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைவிடப்பட்ட போட்டியில் 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார். மேலும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
3-வது இடத்தில் இருந்து தற்போது 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேக்ஸ்வெல் 7-வது இடத்திலும், ஸ்காட்லாந்து வீரர் பிராண்டன் மெக்முலன் 8-வது இடத்திலும் ஜடேஜா 9-வது இடத்திலும், நமீபியா வீரர் எராமஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றன்ர்.
இந்தியாவின் மற்றொரு வீரர் அக்சார் படேல் 17 இடங்களில் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா 3 இடங்களில் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஆசிரியர்களை நியமிப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
- கடந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு ஆட்கள் எவ்வளவு வேகத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டில் ஒரே ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2025-ஆம் ஆண்டு பிறந்து மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், இன்று வரை நடப்பாண்டிற்கான ஆண்டுத் திட்டம் வெளியிடப்படவில்லை.
ஆசிரியர்களை நியமிப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள், 2768 இடைநிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 4000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், 56 சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 10, 355 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.
ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. அதேபோல், கடந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரே ஆள்தேர்வு அறிவிக்கை 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை தான்.
ஆனால், அந்தப் பணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின் ஓராண்டாகியும் இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
அதன்பின் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. 2024-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தகுதித் தேர்வும் நடக்கவில்லை.
2022-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர்.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை.
கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை அண்மையில் தான் வெளியிடப்பட்டுள்ளது.
அதுவும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு கடுமையாக எச்சரித்த பிறகும் தான் அதுவும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் நடக்குமா? என்பதும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும்.
அதை மூடி விடலாமே? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தேர்வு நடத்தப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- தன்னை பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- இந்த வழக்கு விசாரணைக்காக வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தன்னை பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்ப பெற்று கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணைக்காக வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடந்து அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்துவது தொடர்பாக உயர்நீதிமனறம் தான் முடிவெடுக்கும் என்று மாஸ்டர் நீதிமன்றம் தெரிவித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- ரச்சின் ரவீந்திரா 47 பந்தில் அரைசதம் அடித்தார்.
- நியூசிலாந்து 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், பி பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.
என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.
ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்த 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
- அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன.
- நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.
அப்போது அவர்," அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.
அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.
அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்" என்றார்.
டிரம்பின் வரி விதிப்பு கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனத் தூதரகம் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்" என்று அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை.
அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது. அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள்.
இது ஒரு போதும் அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்கப் போவது இல்லை. மேலும் போதை பொருள் ஒழிப்புத் தொடர்பான நமது பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது,
- தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.
- தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.
டெல்லி தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மன அமைதியை தேடி வருகிறார்.
அந்த வகையில் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்த்கர் கிராமத்தில் உள்ள தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.
இந்நிலையில் நேற்று இவ்விடத்துக்கு செல்ல கான்வாய் வாகனங்கள் சூழ அரவிந்த் கெஜ்ரிவால் காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த வருடம் கெஜ்ரிவால் உதவியாளரால் அவமதிக்கப்பட்டதாகப் பரபரப்பைக் கிளப்பிய ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் கெஜ்ரிவாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "முழு உலகையும் விஐபி கலாச்சாரத்திற்காக விமர்சித்த கெஜ்ரிவால், இன்று டொனால்டு டிரம்பை விட பெரிய பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்" என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.






