என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை எழும்பூர்"
- சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்டைன எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை.
சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்.
சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.
- பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.
சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.
மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- 8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையில் 4-ஆவது வழித்தட இணைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி,
காரைக்குடி- சென்னை எழும்பூர் இடையிலான பல்லவன் விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு- எழும்பூர் வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்துடன் நின்றுவிடும்.
8-ஆம்தேதி புறப்படும் ஐதராபாத்- சென்னை தாம்பரம் சாமினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி இரவு புறப்படும் மண்டபம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22662) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து 8-ஆம் தேதி புறப்படும் தூத்துக்குடி- சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மாம்பலம் வரை இயக்கப்படும்.
மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி மாலை புறப்படும் மண்டபம்- சென்னை (16752) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும்.
புதுச்சேரியில் இருந்து 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- சென்னை எழும்பூர் (66052) மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
எழும்பூரில் இருந்து புறப்படும் சேது விரைவு ரெயில் 8-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
9ஆம் தேதி (66051) சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி புறப்படும் மெமு ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
தாம்பரம்- ஐதராபாத் (12759) சாமினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 9-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
- எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
- மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.







