என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    • ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் புகழ்பெற்ற மும்பை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் முதலை யாரையும் பொருட்படுத்தாமல் அங்கு இருந்து அருகில் உள்ள பவாய் ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வனவிலங்கு நலச்சங்க நிறுவனர் பவான் சர்மா கூறுகையில், "ஏரியில் இருந்து வெளியே வந்தது பெண் முதலையாக இருக்கலாம். அது முட்டைபோட இடம் தேடி இருக்கும். அந்த பகுதியில் இருந்தவர்கள் முதலையை யாரும் துன்புறுத்தாத வகையில் பாதுகாத்து உள்ளனர். சிறிது நேரத்தில் முதலை தானாக ஏரிக்குள் சென்றுவிட்டது" என்றார்.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம், முதலை நடமாட்டத்துக்கு வாய்ப்பு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டு கொண்டு உள்ளனர்.

    பவாய் பகுதியில் பத்மாவது ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    • ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
    • யூன் சுக்-இயோல் விவகாரம் குறித்து இந்த தீர்ப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    சியோல்:

    தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் வடகொரியாவுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டினார். இதனையடுத்து கடந்த ஆண்டு ராணுவ அவசர நிலையை அறிவித்தார்.

    இவரது இந்த செயலுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அறிவித்த சில மணி நேரத்திலேயே அதனை பின்வாங்கினார்.

    எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக யூன் சுக்-இயோல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    பின்னர் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு தலைநகர் சியோலில் உள்ள அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவசர நிலை செயல்படுத்திய விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என உறுதியானது.

    எனவே ஹான் டக்-சூ மீதான பதவி நீக்கத்தை ரத்து செய்த கோர்ட்டு அவரை மீண்டும் இடைக்கால அதிபராக நியமித்து உத்தரவிட்டது. அதேசமயம் யூன் சுக்-இயோல் விவகாரம் குறித்து இந்த தீர்ப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த தீர்ப்பு யூன் சுக்-இயோல் ஆதரவாளர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாட்டில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
    • கூட்டணி கட்சி ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பாங்காக்:

    தாய்லாந்தில் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா (வயது 38) தலைமையிலான பியூ தாய் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இதற்கிடையே நாட்டில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

    இதற்கு பேடோங்டார்னின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவத்ரா அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்துவதே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் நத்தபோங் ருயெங்பன்யாட் குற்றம்சாட்டி வந்தார். இந்தநிலையில் பேடோங்டார்ன் மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

    இதன்மீதான வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதேசமயம் கூட்டணி கட்சி ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 21 பந்தில் 81 ரன்களை சேர்த்தது.

    இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சுப்மன் 33 கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும், சாய் சுதர்சன் 74 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். ராகுல் திவாட்டியா 6 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

    • சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து
    • டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

    டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமி அங்கு புதிதாக கட்டப்பட்டு காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் பேசிய அவர், "பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன்" என்றார்.

    இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா எடப்பாடி பழனிசாமி என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்த நிலையில் அமித்ஷா எக்ஸ் தளத்தில் இந்தி மற்றும் தமிழில் பதிவிட்டுள்ளார்.

    அதில் 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மதுவெள்ளம், ஊழல் புயல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

    இவர்களுது சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல்.
    • தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், " இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ஐயா பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!" என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், " இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மனோஜ் பாரதிராஜா அவர்கள்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

    இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' .

    • நடிகர் மனோஜ் மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.

    அந்த வீடியோவில் அவர் குறிப்பிடுகையில், " எனது நண்பன் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இப்படியொரு சோகம் பாரதிராஜாவுக்கு நிகழ்ந்திருக்க கூடாது.

    மனோஜ் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

    • கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

    ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் 48 வயதான மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    பாரதிராஜா சேத்பேட்டையில் உள்ள மனோஜ் வீட்டிற்கு வந்தடைந்துள்ளார். இயக்குனர்களான செல்வமணி, ராம், மாரி செல்வராஜ், சேரன், நடிகர் கார்த்தி, நக்கீரன் கோபால் சேத்பேட்டையில் உள்ள மனோஜ் இல்லத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அரசியல்வாதிகளான 

    மேலும் இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.பல திரைபிரபலங்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவரது இறுதி சடங்கு தேனி மாவட்டத்தில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை.
    • யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போது பி.எம்.கேர் நிதி நிறுவப்பட்டது.

    காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பிரதமரின் நிவாரண நிதியின் மீது ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் நிவாரண நிதியின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதியைப் பெற்றது

    பொதுத்துறை நிறுவனங்கள் கூட அறக்கட்டளைக்கு நிதி அளித்தன. அவர்களின் காலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிதியைப் பயன்படுத்துவதை ஆராய எந்தக் குழுவும் இல்லை.

    மாறாக, பி.எம்.கேர் நிதியின் நிர்வாகத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உள்பட முதல் ஐந்து அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ளனர்.

    5 செயலாளர்களைக் கொண்ட குழு அதன் செலவினங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது. பி.எம்.கேர் நிதி வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கியமான COVID-19 உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது.

    நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை. யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    காங்கிரஸ் கட்சி அதன் முந்தைய நிதி மேலாண்மை நடைமுறைகளை விளக்குமா என சவால் விடுத்தார்.

    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்துள்ளார்.
    • பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒரு வருடம் 3 மாதம் கழித்து நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றம் முறையீடு.

    கேரள மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த பெஞ்சில் இருந்து நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்விடம் மனுதாக்கல் செய்தது.

    இதற்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா "குறிப்பிடப்பட்ட மனுவை மூவ் செய்யுங்கள். நான் பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    கேரள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கே.கே. வேணுகோபால் "நிலுவையில் உள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் அனுப்புகிறார், குடியரசுத் தலைவர் அதை ஒரு வருடம் 3 மாதங்களுக்கு வைத்திருக்கிறார். இரண்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக நேற்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது மிக மிக அவசரமான விசயம்" எனத் தெரிவித்தார்.

    இதே விவகாரத்தில் ஜே.பி. பர்திவாலா தலைமையிலான பெஞ்ச் முன் தமிழக தாக்கல் செய்த மனு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2023ஆம் ஆண்டு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், இரண்டு வருடம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் 243 ரன்களைக் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். கடைசி கட்டத்தில் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடி காட்டினார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 21 பந்தில் 81 ரன்களை சேர்த்தது.

    இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • நடிகர் மனோஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

    இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×