search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "no confidence vote"

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று, தெரசா மே அரசு பிழைத்தது. இதையடுத்து ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்களும் ஆதரவு அளித்தனர்.

    இப்போது இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே முடுக்கி விட்டார். இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது.

    ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இது இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்த்தது. இருந்தபோதும் இந்த ஒப்பந்தத்துக்கு கடந்த நவம்பர் மாத கடைசியில் ஐரோப்பிய கூட்டமைப்பு தனது ஒப்புதலை அளித்தது.

    இருப்பினும், இந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது ஒப்புதலை வழங்க வேண்டிய அவசியம் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எதிராக 432 ஓட்டுக்களும், ஆதரவாக 202 ஓட்டுக்களும் விழுந்தன.

    இதன் காரணமாக பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேரிட்டது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    அதே சூட்டோடு சூடாக தெரசா மேயின் அரசு மீது எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் தெரசா மே அரசுக்கு மிக மோசமான தோல்வி கிடைத்ததால், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த ஓட்டெடுப்பு இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் நடந்தது. அதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 ஓட்டுக்களும், எதிராக 325 ஓட்டுக்களும் கிடைத்தன. 19 ஓட்டுகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப்போனது. இதன் காரணமாக தெரசா மே அரசு பிழைத்துக்கொண்டது.

    இதைத் தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எல்லா கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.

    ஆனால் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இல்லாத ‘பிரெக்ஸிட்’ திட்டத்துக்கு பிரதமர் தெரசா மே உறுதி அளிக்க வேண்டும் என்று தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.

    அதே நேரத்தில் பிரதமர் தெரசா மே, ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

    நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்த நிலையில், பிரதமர் தெரசா மே தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே பேசினார். அப்போது அவர், அனைவரும் தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி விட்டு நாட்டு நலனை கருத்தில் கொண்டு ‘பிரெக்ஸிட்’ திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவர் வரும் 21-ந் தேதி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளதாக லண்டனில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.

    இது போன்ற வேண்டுகோளை 170 முன்னணி தொழில் அதிபர்களும் பிரதமர் தெரசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் முன் வைத்துள்ளனர். #BrexitVote #TheresaMay
    பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

    அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



    இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.

    நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாறு கடந்த 19-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.

    1886-ம் ஆண்டு பிரதமராக இருந்த வில்லியம் கிளேடுஸபோன் அயர்லாந்து உள்நாட்டு கொள்கையை ஆதரித்தார். அது குறித்த வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி 2 ஆக உடைந்து, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதே நிலை தற்போது திரும்பியுள்ளது.

    தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

    இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது.  வாக்கெடுப்பின் முடிவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்நது.  

    நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்ததால் தெரசா மே அரசு தப்பியது.  #BrexitVote #TheresaMay
    பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்படுகிறது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

    அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.

    நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாறு கடந்த 19-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.

    1886-ம் ஆண்டு பிரதமராக இருந்த வில்லியம் கிளேடுஸபோன் அயர்லாந்து உள்நாட்டு கொள்கையை ஆதரித்தார். அது குறித்த வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி 2 ஆக உடைந்து, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதே நிலை தற்போது திரும்பியுள்ளது.



    தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் அரசு கவிழும் ஆபத்து ஏற்படும். அல்லது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். #BrexitVote #TheresaMay
    ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது முறையும் வாக்கெடுப்பு நடத்த அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் கருஜெயசூர்யா கூட்டினார். அதில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

    இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் அரசியல் குழப்பம் உருவானது. நான்தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று ராஜபக்சே கூறினார். நேற்று மீண்டும் பாராளுமன்ற கூட்டம் நடந்தபோது எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பு பாராளுமன்ற விதிகளின்படி நடத்தப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கிறேன். எனவே புதிய ஓட்டெடுப்பை பாராளுமன்ற விதிகளை பின்பற்றி நடத்துங்கள் என்று அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.

    ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து விவாதிக்கலாம். அதில் உள்ள முதலாவது ஷரத்தை நீக்கிவிட வேண்டும். ஓட்டெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி.யையும் பெயர் சொல்லி அழைத்து அவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்? என்று கேட்டு பதிவு செய்து அதன்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

    கடந்த 16-ம் தேதி சபாநாயகர் கருஜெயசூர்யா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் பாராளுமன்றத்துக்கு வந்தார். இன்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.



    இருதரப்பினரும் மிளகாய் தூள் தூவி புதுவித போர் பாணியில் சண்டையிட்டனர். நிலைமையை சமாளிக்க இயலாமல் அவை காவலர்களும், போலீசாரும் திணறினர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    கடுமையான கூச்சல், குழப்பத்துக்கு இடையே பாராளுமன்றத்தை 19-ம் தேதி பிற்பகல் ஒருமணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜெயசூரியா,  அன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை அனைத்து கட்சி தலைவர்கள் அதிபர் சிறிசேனாவை மீண்டும் சந்தித்தனர். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இன்று அதிபரின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிறிசேனா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்களிக்கும் எம்.பி.க்கள் தங்களது பெயர்களை கூறி ஆதரவையோ, எதிர்ப்பையோ பதிவு செய்ய வேண்டும். அல்லது, சர்வதேச அளவுக்கோலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் அவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் நான் இதுதொடர்பாக தீர்மானிப்பேன் என அதிபர் தெரிவித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். #NoConfidenceMotion #PMModi #IndiaTrustsModi
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்தும், அதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் மத்திய அரசு மீது கலவையான விமர்சனத்தை முன்வைத்தும் பேசின.

    எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரம் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் அவர் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுக்களை கூறினார்.

    இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து உரையாற்ற தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். எனவே, இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடாகும்.

    அதிகப்படியான உறுப்பினர் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நாங்கள் இங்கு வரவில்லை, மக்களின் ஆசிர்வாதத்தோடு வந்திருக்கிறோம். பெரும்பான்மையோடு இருப்பதால் இது பா.ஜ.க.வுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பாக இது உள்ளது.

    பிரதமர் இருக்கையில் யார் அமர வேண்டும் என்பதை நாட்டு மக்களே முடிவு செய்வார்கள். மக்களை தவிர வேறு யாரும் என்னை இந்த இருக்கையிலிருந்து எழுப்பவோ, உட்காரவைக்கவோ முடியாது.

    தேவையில்லாமல் நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் குழப்புகின்றன. ஊழல் மீது நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகளுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தன் மீது நம்பிக்கை கிடையாது. தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அரசின் மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள். ஆகவே, அரசியல் குழப்பத்தை உண்டாக்கி லாபம் அடைய காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

    முந்தைய ஆட்சியைக் காட்டிலும் வளர்ச்சித் திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் பாதுகாப்புக்கு நிறையத் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் வைத்திருந்த கடனை அடைத்திருக்கிறோம்.

    முன்பு இருந்த யூரியா பற்றாக்குறை இப்போது கிடையாது, பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம், தொழில் தொடங்க 13 கோடி இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது, கடந்த 70 ஆண்டுகளாக இருளில் இருந்த 18,000 கிராமங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும். ஆனால், ஆந்திராவை பிரித்து காங்கிரஸ் அம்மாநிலத்தின் அமைதியை குலைத்துவிட்டது. பா.ஜ.க ஆட்சியின் போது பிரிக்கபட்ட மாநிலங்களில் அத்தகைய குழப்பம் இல்லை.

    பா.ஜ.க ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் காங்கிரஸின் முயற்சி பலிக்காது. எனவே, 2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.  #NoConfidenceMotion #PMModi  #IndiaTrustsModi #ModiLiesInParliament #ModiTrustVote
    ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் மரியானா ரஜாய் மீது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதை அடுத்து, இன்று அதன்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. #Spain #MarianoRajoy
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகிக்கிறார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து, பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.

    இதனை அடுத்து, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

    பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 176 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ரஜாய் மற்றும் அவரது கூட்டணி கட்சி வாக்குகளின் எண்ணிக்கை 169 மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #noconfidencevote #Spain #MarianoRajoy
    ×