என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.
    • LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் 42.23 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம், 2024 - 2025 கல்வி ஆண்டில் 39.17 சதவீதமாக குறைந்து, 2025 - 2026 நடப்புக் கல்வி ஆண்டில், 37.92 சதவீதமாக மிகவும் குறைந்திருக்கிறது.

    நடப்புக் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 2.39 லட்சமாக இருக்கையில், 12,929 தனியார் பள்ளிகளில், 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.

    தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட, பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லாமல், மரத்தடியில் வகுப்பறைகள் செயல்படுவதும், பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும், அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய வன்மம் அதிகரித்து, மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதால், அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இன்னும் சொல்லப் போனால், திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது. வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் நேரத்தில், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.

    மேலும், அரசுப் பள்ளிகளில், ஆண்டாண்டு கால திமுகவின் புரட்டுகளை பாடத்திட்டத்தில் திணித்திருப்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எளிய குடும்பங்களும், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.

    இதனால், பெருந்தலைவர் காமராஜர், அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது. தமிழகப் பெற்றோர்களும், பெரும் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன. அதில், பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் 12 புள்ளிகள் எடுத்தார்.
    • கேப்டன் பவன் ஷெராவத் போனஸ் புள்ளிகள் 2 உள்பட 9 புள்ளிகள் எடுத்தார்.

    12ஆவது ப்ரோ கபடி லீக் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் போனஸ் பாயிண்ட் 5 உள்பட 12 புள்ளிகள் ரெய்டு மூலம் எடுத்தார். இவருக்கு 9 ரெய்டு வெற்றியாக அமைந்தது. 6 ரெய்டுகளில் புள்ளிகள் கிடைக்கவில்லை. 5 ரெய்டில் பிடிபட்டார். கேப்டன் பவன் ஷெராவத் போனஸ் புள்ளிகள் 2 உள்பட 9 புள்ளிகள் ரெய்டுகள் மூலம் அணிக்கு தேடிக்கொடுத்தார்.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பரத் ரெய்டு மூலம் 9 புள்ளிகளும், எதிரணி வீரர்களை பிடித்தது மூலம் 2 புள்ளிகளும் என மொத்தம் 11 புள்ளிகள் அணிக்கு தேடிக்கொடுத்தார்.

    • திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
    • மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

    ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட போதே, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதையும், இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் காரண, காரியங்களுடன் விளக்கியிருந்தேன்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதன் மூலம் அப்போது நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது புதிய புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது.
    • 30 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.

    8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று பீகாரில் உள்ள ராஜ்கிரில் தொடங்கியது. "ஏ" பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் தென்கொரியா, மலேசியா, வங்கதேசம், சீன தைபே அணிகள் இடம் பிடித்துள்ளன.

    இன்று இந்தியா முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்தியா நாளைமறுநாள் தனது 2ஆவது போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெறும். ஹர்மன்ப்ரீத் சிங் 20, 33, 47 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தார். ஜுக்ராஜ் சிங் 18ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். சீனா 12, 35, 41 ஆவது நிமிடங்களில் கோல் அடித்தது.

    ஆட்டத்தின் முதல் கால்பகுதி நேரத்தின்போது, 12ஆவது நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஷியாயோ டு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2ஆவது 15ஆவது நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல் அடித்தது. 18ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார். 20ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் 30 நிமிட ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க 35ஆவது நிமிடத்தில் பென்ஹாய் சென் கோல் அடித்தார். 41ஆவது நிமிடத்தில் சீன வீரர் ஜியேஷெங் கயோ கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.

    கடைசி கால் பகுதி ஆட்டத்தின்போது, இந்தியா இரண்டுக்கும் அதிகமான பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதில் ஒன்றை (47) நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது.

    • 2ஆவது கேம்-ஐ 21-13 எனக் கைப்பற்றினார்.
    • ஆனால், முதல் மற்றும் 3ஆவது கேம்- இழந்தார் ஏமாற்றம் அடைந்தார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி வர்தானியை எதிர்கொண்டார். முதல் கேம்-ஐ 14-21 என பிவி சிந்து இழந்தார்.

    என்றாலும் 2ஆவது கேமில் சுதாரித்துக் கொண்டு அபாரமான விளைாடினார். இதனால் 2ஆவது கேம்-ஐ 21-13 என எளிதாக வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது கேமில் இந்தோனோசியா வீராங்கனை அபாரமாக விளையாடினார். இதனால் பிவி சிந்து 16-21 என இழந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    • உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.
    • மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர், "உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் இதுவரை 11.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.

    மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும்" என்றார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், " அரசுத்துறை சேவைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்திட, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

    இத்திட்டத்தின் கீழ், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அவை குறித்து அரசு உயர் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்புடனான ஆய்வுக்கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.

    ஒவ்வொரு மனுவுக்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் மகிழும் வண்ணம் அவற்றிற்கு தீர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சீனியர் பிரிவில் 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம்.
    • மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 103 பதக்கங்கள் வென்றுள்ளது.

    ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் 25 மீ சென்டர் ஃபயர் (25m centre fire) பிரிவில் இந்திய வீரர் ராஜ்கன்வார் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றார். அன்குர் மிட்டல் டபுள் ட்ரப் பிரிவில் தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான டபுள் டிரப் பிரிவில் அனுஷ்கா பாதி (93 புள்ளி) தங்கம், பிரனில் இங்க்லே (89) வெள்ளி, ஹபீஸ் கான்ட்ரக்டர் (87) வெண்கல பதக்கம் வென்றனர். மூன்று பேரும் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.

    சீனியர் பிரிவில் இந்தியா 14 தங்கம், 8 சில்வர், 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.

    ஒட்டுமொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் (சீனியர், ஜூனியர், இளையோர்) மூன்று பிரிவுகளில் 103 பதக்கங்கள் வென்றனர்.

    • கால்வாயில் இரட்டைக் குழந்தைகளின் உடல்களை கண்டெடுக்கப்பட்டது.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டபொது பெற்ற தாயே கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

    இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் இரட்டைக் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த, கொடூர தாய்க்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

    கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி, மண்டிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஸ்கொடி கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இரண்டும் பெண் குழந்தைகளாகும்.

    இந்த குழந்தைகளை கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் குழந்தைகளை தூக்கி வீசும் காட்சியை பார்த்து அதிர்ந்தனர். மேலும், அருகில் உள்ள மற்ற சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரோஹினா என் பெண்தான் குழந்தைகளை கொலை செய்து வீசியவர் என்பதை கண்டுபிடித்தனர். மேலும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அதை உறுதிப்படுத்தினர்.

    அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

    ரோஹினா தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி, மற்றொரு நபருடன் ஜலந்தரில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், மண்டியில் உள்ள அவரது முன்னாள் கணவர் வீட்டிற்கு வரும்போது, புதிதாக பிறந்த குழந்தைகள் இல்லாமல் வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளிக்க, குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    • வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.
    • இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும்.

    உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.

    இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.

    1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாகவும், வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    1967-ஆம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான டாக்டர் சி.என். அண்ணாதுரை அவர்கள், "இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

    அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?.

    அதேபோன்று, தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், "மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார் என்றும், 1969-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார்.

    1971-ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

    1974-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

    பின்னர், ஒன்றிய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 – 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகியவற்றை அமைத்தது என்றும், இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை.

    இதற்கிடையில், தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கைகள், அதிகார சமநிலையை ஒன்றிய அரசுக்குச் சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன.

    ஒன்றிய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன.

    இன்றைக்கு நாம் ஒன்றிய-மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை.

    இந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கே.அசோக் வரதன் ஷெட்டி மற்றும் முன்னாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் திரு. மு. நாகநாதன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டும், உயர்நிலைக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

    இக்குழுவின் பணி செம்மையுற அமையும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது.

    கடந்த 23-8-2025 அன்று, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில், உயர்நிலைக் குழுவின் இணையதளத்தினை தான் தொடங்கி வைத்து, இணையவழி வினாத்தாள் படிவத்தினை வெளியிட்டேன். அதனை https://hlcusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

    இந்த விஷயத்தில் மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்தி, உயர்நிலைக் குழுவின் வினாத்தாளினை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்கிட வேண்டுமென்றும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும், நமது நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் தீவிர பங்கேற்பு மிக முக்கியமானதாக விளங்கும்.

    இந்த முயற்சி அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதாகவும், ஒன்றாக, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வைப் புதுப்பித்து, எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.டபிள்யூ மூலம் கிடைத்தது.
    • இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலம் கிடைத்தது.

    துலீப் கிரிக்கெட் காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் உத்கார்ஷ் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 39 ரன்கள் அடித்தார். விராட் சிங் 69 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 230 ரன்னில் சுருண்டது.

    வடக்கு மண்டல பந்து வீச்சாளர் அக்யூப் நபி அபாரமாக பந்து வீசி தொடர்ச்சியாக கடைசி நான்கு விக்கெட்டுகளையும் 4 பந்தில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்தியாவில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய 4ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அக்யூப் நபி 10.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டத்தின் 53ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4, 5, மற்றும் 6ஆவது பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 57ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழத்தினார். இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலமாகவம், இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.ட.பிள்யூ மூலமாகவும் கிடைத்தது. கிழக்கு மண்டலம் ஆல்அவுட் ஆனதும், இன்றைய 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    மற்றொரு காலிறுதியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் 532 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் இன்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்துள்ளது. வடக்கு மண்டல அணியின் டேனிஷ் மாலேவர் 203 ரன்கள் விளாசினார். ரஜத் படிதார் 125 ரன்களும், யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் எடுத்தனர்.

    ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கணித்திருந்தது.
    • விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

    2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி.ஐ. கணித்ததைவிட அதிகமாகும். பண்ணைத்துறை (farm Sector), வர்த்தகம், ஓட்டல், நிதி மற்றம் ரியல் எஸ்டேட் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 8.4 சதவீதமாக இருந்தது. அதன்பின் ஐந்து காலண்டிற்குப் பிறகு தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

    விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

    கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் ஆர்.பி.ஐ., 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும், முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்திருந்தது.

    டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு தற்போது அமலில் உள்ளது. இதன் தாக்கம் 2ஆவது காலாண்டில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.

    • தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடந்து வருகிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

    மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ×