என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா கொடியேற்றம்"

    • தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடந்து வருகிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

    மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், பாதயாத்திரை பக்தர்களும் வருகை புரிவார்கள்.
    • இந்த ஆண்டு சலேத் அன்னை திருத்தலத்தின் 157 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் புகழ் பெற்ற புனித சலேத் அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. பாரிஸ் நகரத்தில் உள்ள மாதா சிலை நிறுவப்பட்ட அதே நாளில் கொடைக்கானலிலும் அதே உருவத்திலான சிலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்று சிறப்பாகும்.

    சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், பாதயாத்திரை பக்தர்களும் வருகை புரிவார்கள். இந்த ஆண்டு சலேத் அன்னை திருத்தலத்தின் 157 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மறை மாவட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலி முடிந்தவுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 14 நாட்கள் நவநாள் முடிந்தவுடன் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் சலேத் அன்னை திருத்தேர் பவனி நடைபெறும். இதனை முன்னிட்டு நடந்த கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்
    • 2-ந்தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை :

    ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி புனிதம் செய்து கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் ஆலயத்தை சுற்றி கொடி பவனியும் நான்கு புறத்திலும் அதிர வைத்த வாண வெடிகளும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கொடியேற்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை முதல், வருகிற 30-ந்தேதி வரை நவநாள் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெற உள்ளது. விழாவில் வரும் 1-ந்தேதி அன்று மாலை ஏழு மணிக்கு அருட்தந்தையர்களால் திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலியும், அதனை தொடர்ந்து புனித அந்தோணியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது.

    இதனைதொடர்ந்து 2-ந்தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் இரவு கலை நிகழ்ச்சிகளும், கிராமிய பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவில் கோடி அற்புதர் புனித அந்தோணி யாரின் இறை மக்கள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் கிராம கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    ×