என் மலர்
தலைப்புச்செய்திகள்
- செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு.
- எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில்,
செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு அல்ல, அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார்.
- தி.மு.க.வை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
- டி.டி.வி தினகரன் கூறுவதை போல் நாங்கள் யாரையும் குறைகூறவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டி.டி.வி. தினகரன் விலகியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
தி.மு.க.வை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
டி.டி.வி தினகரன் கூறுவதை போல் நாங்கள் யாரையும் குறைகூறவில்லை. அதற்கான நபர்களும் தாங்கள் அல்ல.
செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது உட்கட்சி விவகாரம், அதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றார்.
- தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
- சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.
6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.
15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தை இந்தி மொழியிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.
அதில் பேசிய துல்கர் சல்மான் " படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு புது முயற்சியாக தான் தயாரித்தேன். திரைப்படம் 5 பாகங்களாக உருவாக்க இருந்தோம், இப்பொழுது படத்தின் வரவேற்பை வைத்து அதிகம் எடுக்கலாம் என நினைத்துள்ளோம். படத்தின் லாபத்தை படக்குழுவிற்கு கண்டிப்பாக பகிர்வேன். அவர்களது உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என குறிப்பிட்டார்.
- செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
- அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன்.
- எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார்.
- திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து, அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கதைக்களம்
பள்ளியில் படித்து வரும் நாயகி அஞ்சலி சிவராமனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. தன் பள்ளியில் படிக்கும் ஹிருது ஹாரூனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அஞ்சலியின் தாய் சாந்தி பிரியாவுக்கு தெரியவருகிறது. பிறகு பள்ளிக்கே தெரிந்து காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருவரும் பிரிகிறார்கள்.
அஞ்சலியை வேறொரு பள்ளியில் சேர்க்கிறார்கள். அதன்பிறகு நான் என் விருப்பம்படி வாழப்போகிறேன் என்று சொல்லி விடுதியில் தங்கி படிக்க ஆரம்பிக்கிறாள். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சீனியர் ஒருவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அஞ்சலியை ஏமாற்றி விடுகிறார். அதன் பிறகு வேலைக்கு செல்லும் போது டிஜே உடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென்று இருவரும் பிரிகிறார்கள்.
இறுதியில் நாயகி அஞ்சலியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பள்ளி, கல்லூரி, வேலை என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், கோபம், சோகம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஹிருது ஹாரூன், டிஜே ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்ணின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வர்ஷா. ஒரு பெண்ணுக்கு காதல், மோதல், பிரிவு, வலி இதெல்லாம் வரும், போகும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு நகந்துக்கொண்டே இருக்க வேண்டும், நமக்காக காலம் நிற்காது என்பதே சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் பார்க்கும் போது, பெண்ணின் ஆட்டோகிராப் வெர்ஷன் போல் இருக்கிறது. இந்த கதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும். அனைத்து தர ரசிகர்களும் பிடிப்பதில் சந்தேகமே.
இசை
அமித் திரிவேதி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.
ஒளிப்பதிவு
ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, இளவரசர் ஆண்டர்சன் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி அமைந்துள்ளது.
தயாரிப்பு
கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 2/5
- வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள் மற்றும் ஆலையின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும் அதில் சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சசிகலா வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியது தொடர்பாக உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
- சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று ‘3 டி’ வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள பல்வேறு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும், குறிப்பாக பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதனை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் லட்சுமிபிரியா, வீரமுத்து ஆகியோர் தஞ்சாவூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு குறியீடுகளை வரைந்து வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் மண்டைஓடு சின்னம் வரையப்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையான நம்பர் 1 வல்லம் சாலை எலிசா நகர் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் '3 டி' வடிவ (முப்பரிமாண) எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று '3 டி' வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பரீட் சார்த்த முறையில் இக்குறியீடு வரையப்பட்டு உள்ளது. மேலும், 2 இடங்களில் மண்டை ஓடு சின்னமும் வரையப்பட்டு உள்ளது.
இந்த குறியீடு பலன்தரும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் இக்குறியீடுகளை வரைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.
- பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும்.
மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். ரத்த விருத்திக்கு உதவும்.
இருமல் இருந்தால் மாதுளை மொக்கை வெய்யிலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று வேளையும் கொடுக்கலாம்.
சில நேரங்களில் மூக்கில் ரத்தம் கசிந்தால், மாதுளம் பூவைச் சாறு எடுத்து, அருகம்புல்லைச் சேர்த்து இடித்து அந்தச் சாறைப் பருகலாம்.
தொண்டைக்கம்மல், தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு மாதுளம் பூவை எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி, கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, அதில் சிறிது தேனும், எலுமிச்சம் பழச்சாறும் விட்டு கலக்கி, கொப்பளிக்கலாம்.
அருகம்புல் வேர் எடுத்து, மிளகு, சீரகம், அதிமதுரம், மாதுளம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் தயாரித்து, பசு வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து குடித்தால், உடலில் கலந்த விஷம் முறியும். மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.
பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும். அதிவிடயம், பீநாரிப்பட்டை, மாதுளம் பழத்தோல், வில்வப் பழச் சதை, குடசப்பாலை, முத்தக்காசு, ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி அருந்தினால், பேதி நிற்கும்.
மாதுளம் பூ, காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சமமாகக் கலந்து, அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து கண்களில் விட்டால், கண் தொடர்பான பாதிப்புகளுக்கு நல்லது.
மாதுளம் பூவை பசு நெய்யுடன் சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்ச வேண்டும். அதை இறக்கி ஆறவைத்து, கண்ணாடிப்புட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு நாள்தோறும் காலையும், மாலையும் அருந்த, குணம் ஏற்படும்.
எல்லாவற்றிலும், கண் மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நலம்.
- சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதினுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.
வரி விதிப்பு விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளின் வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்து வந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதினுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனா, ரஷியாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவதால் டிரம்ப் திடீரென்று மோடி எப்போதும் எனது நண்பர்தான், இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார். டிரம்பின் இந்த கருத்தை பிரதமர் மோடி வரவேற்று உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
இந்தியா-அமெரிக்கா உறவுகள் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறோம். முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என்று தெரிவித்து உள்ளார்.
- கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
- கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
மதுரை :
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை இணைக்க அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார்.
* தேவையின்றி யாரையும் சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
* கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
* கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.
* அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம்.
* கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை.
* விஜயுடன் கூட்டணி என பேசுவது தவறானது.
* தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக்கூறினேனே தவிர அவருடன் இணையப்போகிறேன் எனக்கூறவில்லை.
* அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.






