என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதுளம்பழம்"

    • மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.
    • பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும்.

    மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். ரத்த விருத்திக்கு உதவும்.

    இருமல் இருந்தால் மாதுளை மொக்கை வெய்யிலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று வேளையும் கொடுக்கலாம்.

    சில நேரங்களில் மூக்கில் ரத்தம் கசிந்தால், மாதுளம் பூவைச் சாறு எடுத்து, அருகம்புல்லைச் சேர்த்து இடித்து அந்தச் சாறைப் பருகலாம்.

    தொண்டைக்கம்மல், தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு மாதுளம் பூவை எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி, கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, அதில் சிறிது தேனும், எலுமிச்சம் பழச்சாறும் விட்டு கலக்கி, கொப்பளிக்கலாம்.

    அருகம்புல் வேர் எடுத்து, மிளகு, சீரகம், அதிமதுரம், மாதுளம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் தயாரித்து, பசு வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து குடித்தால், உடலில் கலந்த விஷம் முறியும். மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.

    பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும். அதிவிடயம், பீநாரிப்பட்டை, மாதுளம் பழத்தோல், வில்வப் பழச் சதை, குடசப்பாலை, முத்தக்காசு, ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி அருந்தினால், பேதி நிற்கும்.

    மாதுளம் பூ, காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சமமாகக் கலந்து, அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து கண்களில் விட்டால், கண் தொடர்பான பாதிப்புகளுக்கு நல்லது.

    மாதுளம் பூவை பசு நெய்யுடன் சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்ச வேண்டும். அதை இறக்கி ஆறவைத்து, கண்ணாடிப்புட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு நாள்தோறும் காலையும், மாலையும் அருந்த, குணம் ஏற்படும்.

    எல்லாவற்றிலும், கண் மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நலம்.

    • மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் சுற்றுலா பயணி ஒருவர் போலீசில் சிக்கினார்.
    • இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லிஸ்பன்:

    அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷிய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஆர்டர் செய்ய முயன்றார்.

    மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது.

    இதை அறியாத அவர் ஆர்டர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்தனர். அதன்பின், அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்தபின், அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் இல்லை என உறுதி செய்தனர்.

    விசாரணையில், மொழிபெயர்ப்பில் நடந்த பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    ×