என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில், 'எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 



    • பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார்.
    • நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார். இருவரும் ஆவேசமாக மோதிக் கொண்ட போதிலும் முதல் ரவுண்டில் நிஷினகாவின் கையே சற்று ஓங்கியது.

    அடுத்த ரவுண்டில் நிகாத் ஜரீன் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு அதை புள்ளியாக மாற்றினார். கடைசி ரவுண்டில் ஜரீனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக நிஷினகா அடிக்கடி அவரை கட்டிப்பிடித்ததால் போட்டி நடுவரின் எச்சரிக்கைக்குள்ளானதுடன், ஒரு புள்ளியை அபராதமாக இழந்தார். இது ஜரீனுக்கு சாதகமாக அமைந்தது. முடிவில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மீனாக்ஷி (48 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் வாங் கிபிங்கை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். முன்னதாக லக்ஷயா சாஹர் (80 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீரர்கள் தோற்று நடையை கட்டினர்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.

    ரிஷபம்

    விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    நன்மைகள் நடைபெறும் நாள். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். வியாபார விரோதம் விலகும்.

    கடகம்

    மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். வீட்டு பராமரிப்புச் செலவு கூடும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள்.

    சிம்மம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கன்னி

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். புதுமனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    விருச்சிகம்

    புகழ் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    தனுசு

    மனக்குழப்பம் அகலும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம்.

    மகரம்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கும்பம்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். பக்கத்திலுள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். கல்யாண முயற்சி கைகூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    மீனம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்களை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    • இப்படம் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
    • நடிகர் பார்த்திபன், அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

    இதனால் கடந்த சில தினங்களாக 'இட்லி கடை' படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகின. நேற்று 'இட்லி கடை' படத்தில் நடிகர் பார்த்திபன், அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்த நிலையில், தனுஷுன் 'இட்லி கடை' படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'Mischievous' பார்த்திபன்

    Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்!

    குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடுபடுகிறேன்.

    'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக. அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்! குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர் அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமெண்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி.

    இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்….

    It tally with a tale of

    'Italy shop' by Danish

    இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார். 



    • சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தங்கம் கடத்தல் தொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சீனாவில் இருந்து அசல் எல்லைக்கோடு வழியாக இந்தியாவுக்கு 1,064 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ.800 கோடி ஆகும். இதுதொடர்பாக 'காபிபோசா' சட்டத்தின்கீழ் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 10 பேரை கைது செய்துள்ளது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-25 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை மாலை 6.44 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : ரேவதி இரவு 7.42 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-வரவு

    கடகம்-உதவி

    சிம்மம்-உண்மை

    கன்னி-தாமதம்

    துலாம்- சிரமம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- நற்செயல்

    மகரம்-சிந்தனை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-நம்பிக்கை

    • இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
    • ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52-வது தேசிய மேலாண்மை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்குள் துல்லியமாக முப்படைகளின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

    அப்போது, தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் மூலம் 24 மணி நேரமும் தரவுகளை வழங்கினர்.

    ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிரோன்கள் மற்றும் சுற்றித்திரியும் வெடிமருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஆகாஷ் தீர்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்களையும் சோதிக்கப்பட்டன.

    இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதல் செலவுகள் இல்லாமல் மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் 4 ஆயிரம் கிலோவில் இருந்து 5 ஆயிரத்து 100 கிலோவாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல், அடுத்த தலைமுறை ஏவுதளம், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏவுதளம் இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும்.
    • இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 2-வது நாளான இன்று (புதன்கிழமை) துபாயில் நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

    7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கும், சரியான லெவன் அணியை கண்டறிவதற்கும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது. முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது போன்ற சலசலப்புகளை மறந்து விட்டு இந்திய வீரர்கள் போட்டிக்கு முழுவீச்சில் ஆயத்தமாகியுள்ளனர்.

    தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் ஷர்மாவுடன், சுப்மன் கில் இறங்க வாய்ப்புள்ளதால் அனேகமாக சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்காது என தெரிகிறது. மற்றபடி சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் இரு போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் அணிக்கு திரும்பியிருப்பது இந்தியாவுக்கு பலமாகும். அமீரகம் குட்டி அணி என்பதால் இந்தியா வெற்றியோடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐக்கிய அரபு அமீரக அணி முகமது வாசீம் தலைமையில் களம் காணுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் நொறுக்கியவர் (114 சிக்சர்) என்ற பெருமைக்குரியவர் வாசீம். அவர் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடந்த 2-3 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி சரியாக செயல்பட்டு முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்க முடியும். ஓமனை நாங்கள் வீழ்த்தி விடுவோம். மற்ற இரு அணிகளில் ஒன்றை வீழ்த்தி சூப்பர்4 சுற்றை எட்டுவதே எங்களது இலக்கு' என்றார். சாதகமான உள்ளூர் சூழல் மட்டுமின்றி, அந்த அணிக்கு இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் அனுகூலமாகும்.

    இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    ஐக்கிய அரபு அமீரகம்: முகமது வாசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ராகுல் சோப்ரா, ஆசிப் கான், முகமது பரூக், ஹர்ஷித் கவுசிக், முகமது சோகைப், முகமது ஜவாதுல்லா அல்லது சாகிர் கான், ஹைதர் அலி, ஜூனைத் சித்திக், முகமது ரோகித்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
    • அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.

    இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.

    ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.

    அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

     இந்த சூழலில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.

     அவர்களில் முதலாவது, காத்மாண்டு மேயர் மற்றும் பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அடுத்தது சுமனா ஸ்ரேஸ்தா (40). அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) எம்பிஏ பட்டம் பெற்ற இவர், நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக முன்பு பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பற்றிப் பேசி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

    மூன்றாவதாக முன்னாள் பத்திரிகையாளரும் இரண்டு முறை துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே (49) பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், கூட்டுறவு சேமிப்பு முறைகேடு வழக்கில் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.   

    • விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, ​​கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    • 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் தள்ளி பூட்டினர்.

    கர்நாடகாவில் புலியைப் பிடிக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகளை விவசாயிகள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குண்டல்பேட்டை அருகே பொம்மலப்புரா கிராமம் உள்ளது. ஷமீக் காலமாக கிராமத்தினரின் கால்நடைகளை அங்கு திரியும் புலி, அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்துள்ளது.

    புலியைப் பிடிக்க வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், வனத்துறையினர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

    புலியை பிடிப்பதாக பெயருக்கு ஒரு கூண்டு மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் நேற்று காலை, விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    ஆனால், வனத்துறையினர் ஆடி அசைந்து தாமதமாக வருவதற்குள் புலி அங்கிருந்து ஓடிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வந்த 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் வைத்து பூட்டினர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த வனத்துறை ஏசிஎப் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி பூட்டப்பட்ட அதிகாரிகளை விடுவித்தனர்.

    மேலும் அந்த புலியை பிடிக்கப்படும் வரை தலைமையகத்திற்குத் திரும்ப கூடாது என அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 

    • ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும்

    கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.

    காசா போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் அங்கிருந்தபடி ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை கத்தார் கடுமையாகக் கண்டிக்கிறது.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது. கத்தாரின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது.

    இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். இது கத்தாரின் குடிமக்கள்  பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    பிராந்தியத்தின் பாதுகாப்பை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.  இந்த தாக்குதலுக்கு ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை ஆபத்தான முறையில் மீறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்துள்ளார்.

    அவ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் ஆபத்தானது. இந்தக் குற்றச் செயல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். கத்தாரின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.  

    • பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
    • அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள், கலவரம், சஞ்சய் ராவத்

    அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேற்கோள் காட்டி, உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    செவ்வாயன்று, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த கலவரங்களின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் ராவத் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக டேக் செய்தார்.

    அந்த பதிவில், "இன்று நேபாளம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்," என்று எழுதியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   

    ×