என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
- இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் நாளை (டிசம்பர் 3) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார்
அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதம் முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி வழக்கை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பு கிடைத்தவுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார்.
திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் நாளை (டிசம்பர் 3) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார்
அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதம் முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி வழக்கை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
- ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா
- 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். இது உலக பிரசித்தி பெற்றது. இத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரை அரோகரா பக்தி கோஷத்துடன் வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து தற்போது 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
- டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
- மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது
மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புழல் ஏரிக்கான நீர்வரத்து 2,930 கன அடியில் இருந்து 4,460 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரியில் இருந்து 1500 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 2006 - 16 காலக்கட்டத்தில் சிங்காநல்லூர் எம்எல்ஏவாக இருந்தார்
- 2018-ல் ஓபிஎஸ் - இபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி, புதிய கூட்டணி குறித்து விவாதித்து வருகின்றன. இருக்கின்ற நிர்வாகிகள் இருக்கும் கட்சிகளை விட்டு, மாற்றுக் கட்சிக்கும் தாவும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். கோவை சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ -வாக இரண்டு முறையும், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராகவும் இருந்தவர் சின்னசாமி. இதில் அண்ணா தொழிற்சங்க பணத்தை கையாடல் செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு இவர்மீது புகார் எழுந்தது. இதனால் இவரை கட்சியில் நீக்கம் செய்து அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்அறிவிப்பு வெளியிட்டனர்.
தன்னைக் அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். மேலும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் துரோகிகள் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
- கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக 2 நாட்கள் சற்று ஓய்ந்திருந்த மழை நேற்று இரவு முதல் மீண்டும் வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. இதனால் ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் வகுப்பறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 2215 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4337 மி. கனஅடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.20 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6924 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.30 அடி. வரத்து 38 கன அடி. இருப்பு 292.15 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என அதன் முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. வரத்து 15 கன அடி. திறப்பு 14.47 கன அடி.
கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சபரிமலை சீசன் என்பதால் தினந்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். ஆனால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 16.8, வீரபாண்டி 2.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 17.4, வைகை அணை 30, உத்தமபாளையம் 3, தேக்கடி 3.4 என ஒரே நாளில் 119.8 மி.மீ. மழை அளவு பதிவானது.
- வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
- இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.
தென்காசி:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.
இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டதும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு ஒரு உதாரணம். இந்தியா கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி." என தெரிவித்தார்.
காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் பனகல் கட்டிடம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கருப்புப்பட்டை அணிந்து கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மோசஸ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளை பறிக்கும் அரசாணை எண் 24-ஐ ரத்து செய்துவிட்டு உடனடியாக அரசாணை எண் 20-ஐ அமல்படுத்த வேண்டும்.
சிறப்பு ஆள்சேர்ப்பு நடத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது அவர்கள், தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்த இடைவிடாத கனமழையையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவரது அலுவலகத்திலேயே வைத்து அவர் மர்ம நபரால் அரிவாளால் வெட்டப்பட்டார்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு, எந்த பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






