என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ராட்சத பலூனுக்கு காற்று ஏற்றும் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார்.
- உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து கலா என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராட்சத பலூனுக்கு காற்று ஏற்றும் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நடைபெற்ற இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மணலூர்பேட்டை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் குறித்த முழுதகவல் இன்னும் வெளியாகவில்லை.
முதலில் மூன்றுபேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானநிலையில், ஒருவர்தான் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பாக பேட்டியளித்த அவர், சிலிண்டர் வெடிப்பு விபத்தில் கலா என்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்; இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
- விசாரணை இன்றுடன் முடிந்துவிட்டது.
- 41 பேரின் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி என அமித்ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அதனைத்தொடர்ந்து அக்கட்சித் தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜனவரி 12 அன்று விஜய்யிடம் முதல் கட்ட விசாரணை 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஜனவரி 19 (இன்று) சுமார் 5.30 முதல் 6 மணி நேரம் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படலாம், அவர் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படலாம் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி நிர்மல் குமார்,
"சம்பவம் தொடர்பாக என்னென்ன தகவல்கள் தேவைப்பட்டதோ அதனை எங்கள் தலைவரிடம் (விஜய்) கேட்டுத் தெரிந்துகொண்டனர். இன்றுடன் எங்கள் தலைவருக்கு எந்த சம்மனும் இல்லை. விசாரணை இன்றுடன் முடிந்துவிட்டது. இன்றுமுழுவதும் எங்கள் தலைவர்மீதும், கட்சிமீதும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அனைத்தும் பொய்கள். விஜய் கைது, குற்றப்பத்திரிக்கையில் பெயர் போன்ற அனைத்தும் தவறாக தகவல்கள்.
இந்த வழக்கில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என எங்களைவிட ஊடகங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தேவைப்பட்டால் எங்கள் ஒத்துழைப்பை கொடுப்போம். 41 பேரின் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி என அமித்ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதுதொடர்பாக ஊடகங்கள் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். இதுதொடர்பாக செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என கேள்வி எழுப்பியிருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டாரா என கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் இன்றுகாலை முதல் பல தவறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பபட்டு வருகிறது." என தெரிவித்தார்.
- புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.
- கர்நாடக மக்களிடம் இருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.
திருப்பூர் அருகே, தங்கள் மாநிலக்கொடியை வாகனத்தில் பொருத்தி வந்ததால், கர்நாடகத்தினர்மீது தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர்,
தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது.
கர்நாடக மாநில முதலமைச்சர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர்.
அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர். கர்நாடக உரிமைப்போராட்டங்கள் யாவிலும் சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி கன்னட மக்கள் அனைவரும் கட்சி கொடிகளை விடுத்து, மஞ்சள் சிகப்பு வண்ணங்களுடனான கர்நாடக கொடியை தங்களின் ஒற்றை அடையாளமாக்கி போராடும் அளவிற்கு அக்கொடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.
கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும். அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும்.
இத்தகு வன்முறையில் ஈடுபடுவோர்கள், கன்னட மக்கள் மீதும், கர்நாடக கொடியின் மீதும், உங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டுவதற்கு பதிலாக இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும், அதற்கு துணைநின்றவர்கள் மீதும் உங்கள் வெறுப்பும், எதிர்ப்பும் இருந்திருக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் அப்பாவி கன்னட மக்களை வெற்று வெறுப்புணர்வு கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஒரு சிலரின் இதுபோன்ற தேவையற்ற அடாவடிச் செயல்களால் கர்நாடகாவில் எழுந்துள்ள பதற்றமும், இதை சாதகமாக பயன்படுத்தி கன்னட அமைப்புகள் சில, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக செய்யும் வெறுப்பு பரப்புரைகளும் பெருங்கவலையைத் தருகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் இரண்டாவது நாளாக டெல்லியில் உள்ள சிபிஐ ஆஜராகி விளக்கம் அளித்தார்.
- தியேட்டர் ஒன்றிலும் இந்த டயலாக்கை ஜீவா பேசியிருந்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றுகூட தவெக தலைவர் விஜய் இரண்டாவது நாளாக டெல்லியில் உள்ள சிபிஐ ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த கரூர் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயரும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. அதாவது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தன்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் உயிரிழப்புகள் தொடர்பாக, 'படிச்சு படிச்சு சொன்னோம். கண்டிஷன்ஸை ஃபாலோ பண்ணுங்கடான்னு' எனப் பேசியிருந்தார். ஆனால் அது சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல் செய்யப்பட்டு, கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த டயலாக்கை தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடிகர் ஜீவா பேசியிருந்தார். அதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு டிரெண்டிங்காக வைத்தோம். இயக்குநர் கூறியதால்தான் பேசினேன் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தியேட்டர் ஒன்றிலும் இந்த டயலாக்கை ஜீவா பேசியிருந்தார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர். இந்நிலையில் இதற்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல உயிர்கள் பறிபோன ஒரு சோகமான நிகழ்வின் போது வெளிப்பட்ட வார்த்தைகளை, ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக அல்லது கிண்டலாகப் பயன்படுத்தியது மிகவும் உணர்ச்சியற்ற செயல் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், இபிஎஸ்-ஐ சந்தித்து பேசி இருப்பதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்ததாக தகவல் வெளியானது.
அவர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தாம் சந்திக்கவில்லை என கொ.இ.பே தலைவர் தனியரசு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
- 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்தவர்.
- கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும், கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...
கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
- பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
பா.ம.க. இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில் சட்டசபை தேர்தலில் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது. இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டை நாடிய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ம.க.விற்கு உரிமைகோரி சிவில் மற்றும் ரிட் வழக்குகளை ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மனுவில், பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ரிட் மனுவில், பா.ம.க.வின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கண் துடைப்புக்காக தி.மு.க. அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
- அறிவாலயம் அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும்!
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஒரு நபருக்கு ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண் துடைப்புக்காக தி.மு.க. அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அறிவாலயம் அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் இருக்கை விவகார் தொடர்பாக பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு.
சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இளைஞர்களும் மற்ற பயணிகளும் அந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மெட்ரோ ரயில்களில் அதிகாரிகள் அவ்வப்போது 'திடீர் சோதனை' நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பயணிகளுக்கான இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தகுதியற்ற நபர்கள் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, முதியோர்களுக்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கோ இடம் தர மறுத்தால், அவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்த அறிவிப்புகளை ரெயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலமாகவும் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயிலில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முதியோர்கள் ஏறும் போது அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மெட்ரோ நிர்வாகம் இதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
- முதல் பஸ் காலை 10 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கும் புறப்படும்.
- இந்தப் பஸ்களின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பஸ் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம்.
சென்னை:
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை உலா' என்ற சுற்றுலா பஸ் சேவை கடந்த 14-ந் தேதி தொடங்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பார்க்க ஏதுவாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் இயக்கப்பட்ட பஸ்களைப் போன்று 5 பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள் பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம் செம்மொழிப் பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், பல்லவன் இல்லம் வழியாகச் சென்று மீண்டும் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10, 10.30, 11, 11.30, பகல் 12, 12.20, 12.50, 1.20, 1.50, பிற்பகல் 2.20, 2.50, மாலை 3.20, 3.50, 4.10, 4.35, 5, 5,40, 6.20, 7 இரவு 7.50, 8.30 ஆகிய நேரங்களில் பஸ்கள் புறப்படும்.
முதல் பஸ் காலை 10 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கும் புறப்படும். இந்தப் பஸ்களில் ரூ.50 கட்டண டிக்கெட் எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் எந்த இடத்திலும் ஏறி இறங்கிக்கொள்ளலாம்.
இந்தப் பஸ்கள் வார நாள்களான திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். வார இறுதி மற்றும் மற்றும் அரசு அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
இந்தப் பஸ்களின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பஸ் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி 5 பஸ்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
இவ்வாறு சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
- கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்பாகவே கறிக்கோழி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
உழவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி அவர்களை ஒடுக்கி வருகிறது. மேல்மா பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளால் உழவர்களின் முதல் எதிரியாக திமுக அரசு உருவெடுத்திருக்கிறது.
கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. திட்டங்களை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
- 5 தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்த உடனே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இதற்கிடையே எம்.ஜி.ஆர். பிறந்தநாளான நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், ஆண்களும் இலவசமாக பஸ் பயணம், 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்கள் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இது, 150 நாட்களாக உயர்த்தப்படும். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறுகையில், தி.மு.க. திட்டங்களை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், எடப்பாடி பழனிசாமியின் இந்த நாடகத்தை மக்கள் நம்பபோவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிடவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
5 தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்த உடனே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது. மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.
அப்போது, டி.டி.வி. தினகரனை கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, கூட்டணி தர்மத்தில் இருந்தவர்களை கூப்பிட்டு சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. நினைப்பது தவறு இல்லை. அதை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது. அவர்கள் அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறார்கள் என்று கூறினார்.






