என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
    • "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இதயதெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,

    "அம்மா" எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,

    பெண்களின் தைரியம்,

    தாய்மையின் உருவம்.

    அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;

    மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.

    புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், "Poverty Alleviation" -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.

    சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.

    We Take a leaf out of your book in all

    of our actions for the people Amma

    'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அ.தி.மு.க. என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.

    அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.

    அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,

    கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.

    "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"

    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!

    வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!

    வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறியுள்ளார். 



    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரெயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, எழும்பூர்- பரங்கிமலை, எழும்பூர்- கூடுவாஞ்சேரி, எழும்பூர்- செங்கல்பட்டு இடையே கட் சர்வீஸ் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்கள் சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது. எழும்பூருக்கு வரும் போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது. வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
    • போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

    இந்த திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வாசல் வழியாக சென்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காரில் இருந்தபடி தரிசனம் செய்தார்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதை முன்னிட்டு கோவில் வாசலில் இருந்து கருவறை வரையிலும் அதிகாரிகள் பார்வையிட்டு உள்ளனர். கருவறைக்கு முன்னதாக உள்ள மகாமண்டபத்தின் படிக்கட்டுகளில் பிரதமர் ஏறி கருவறைக்கு எளிதாக சென்று வர வசதியாக படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்தும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இன்று போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை கோவிலில் பிரதமர் தரிசனம் செய்துவிட்டு திரும்புவார் எனவும் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஓரிருநாளில் தெரிய வரும் என கூறப்படுகிறது.

    • காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * ஐ.ஏ.எஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பிப்.1ஆம் தேதி நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    • காவல் துறையினரிடம் அனுமதி பெற ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறினர்
    • விதிமுறைகளை மீறி 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

    விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '22.02.2026 அன்று. தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    கடந்த 28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டம் 08.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தார். இதுகுறித்து காவல் துறை சார்பில் 30.01.2026 அன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண்.05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்பட்ட தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக 'சில தவிர்க்க முடியாத' காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பாடுள்ளது. ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு தங்களிடம் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளித்தார்.

    மீண்டும். 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில் 18.02.2026 அன்று அளித்த மனுவில் வேலூர் மாவடத்தில் 23.02.2025 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம். அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்" மேலும் இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காலம் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர்.

    தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் போது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.

    தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது ஒற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது மாண்பமை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

    • பிப்.1ஆம் தேதி நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று கேட்டறிந்தார்.

    இதுகுறித்து வர வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • தமிழகத்தில் சிலர் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
    • குருவின் அருள் மூலமே தைரியமும் ஆதரவும் கிடைக்கும்.

    திருப்பரங்குன்றம் மலையில் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவரின் மனுவை ஏற்று விளக்கேற்ற உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

    இந்த உத்தரவும், அதை தமிழக அரசு செயல்படுத்தாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி சுவாமிநாதன், "தமிழகத்தில் சிலர் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

    குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள்  அயோக்கியர்கள், முட்டாள்கள் , காட்டுமிராண்டிகள் என்று  அழைக்கிறார்கள்.

    அவ்வாறு கூறுபவர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள் மற்றும் காட்டுமிராண்டிகள்.

    குருவின் அருள் மூலமே தைரியமும் ஆதரவும் கிடைக்கும், குருமார்களின் அருகே செல்லும்போது அவர்களின் Aura பக்தர்களின் பலவீனங்களை நீக்க உதவும்

    எனது பணிக்காலத்தில் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இன்னும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று பேசியுள்ளார். 

    • திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை

    கடந்த 2014 இல் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது ஓதியம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

    உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவித்தும் கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.   

    • 2021 சட்டசபையின் போது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 50.7 சதவீதம்.
    • தற்போது 51.07 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொண்ட பிறகு இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடி, 77 லட்சத்து, 38 ஆயிரத்து 925 பேர் ஆகும். பெண் வாக்காளர்கள் 2 கோடியே, 89 லட்சத்து, 60 ஆயிரத்து 838 பேர் ஆகும்.

    மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 67 லட்சத்து, 7 ஆயிரத்து 380 ஆகும். இதில் பெண் வாக்காளர்கள் 51 சதவீதம் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை விட இது அதிகமாகும்.

    2021-ல் 3.09 கோடி ஆண் வாக்காளர்கள் இருந்தனர். 3.19 கோடி பெண் வாக்காளர்கள் இருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 50.7 சதவீதம் ஆகும். ஆண்- பெண் வாக்காளர்கள் இடையிலான வித்தியாசம் 10.15 லட்சமாக இருந்தது. தற்போது அது 12.21 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 51.07 சதவீதம் ஆகும்.

    சென்னையில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 14.64 லட்சமாகும். ஆண் வாக்காளர்கள் 13.64 லட்சமாகும்.

    • குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
    • தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை?

    கரூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கூட கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தான் புகார் அளித்தும் தற்போதுவரை கரூர் காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக ஜோதிமணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டு வைத்து, குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.

    பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை? இதில் எந்த பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு கிடையாதா? இப்படித்தான் பெண்களைப் பாதுகாப்பதா?

    அரசியல் தலையீடு இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாக்கிற இந்த காவல்துறையின் கீழ் மிக நிச்சயமாக பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. தமிழ்நாடு காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்

    தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு இன்று (பிப். 23) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட உள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 46 திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

    ×