என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
- தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் தனது ஆதரவாளர் களோடு ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகுவதாகவும், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கும் புதிய கட்சியில் இணைவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராக முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமாரை நியமிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டு கட்சியின் தொடக்க விழா அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் நிறுவன தலைவராக இருந்து எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை தொடங்கி வைத்தார்.

பொதுச் செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் கட்சியின் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கட்சியின் தொடக்க விழாவில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே என்றும், தற்போதைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்றும் கூறினார்.
எனினும், விஜய்யின் கொள்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும், மக்களைச் சாதி, மதப் பாகுபாடின்றி சமமாகப் பாவிக்கும் தலைவரான அவரை சட்டமன்ற தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய் தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால், தங்களது இயக்கத்தைச் சேர்த்தவர்கள் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றும், எவ்வித பேரமும் இன்றி மக்கள் நலனுக்காகவே இந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
கட்சி தொடக்க விழாவில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூறுகையில், இக்கட்சியில் இணையும் தொண்டர்கள் வயது மூப்பு அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், இருவர் சமீபத்தில் இறந்தவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.
விழாவில் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அம்மாள், கவுரி, ஜோதிராமன், ஏ.வஜ்ரவேலு, ஜெ.காமாட்சி கான் ஜெயகாந்தன், டபுள்யூ. எஸ்.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார்.
- மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
பேராவூரணி:
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியை சோ்ந்தவர் ராஜன். இவரது மகன் மிதுன்குமாா் (வயது 30).
சம்பவத்தன்று காலை மிதுன்குமார் தனது காரில் பேராவூரணி கடைவீதிக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலின் முன்பு காரை நிறுத்தியவா் காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். அந்த காரின் என்ஜின் நீண்ட நேரமாக இயங்கியபடி இருந்துள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.
உடனடியாக அவர்கள் மிதுன்குமாரை மீட்டு, பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். மிதுன்குமாருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்.
- முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.
துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார். சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
- தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
வீட்டில் தவறி விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் பிரச்சனை, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருவிப் பொருத்தப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி 101-வது பிறந்த நாளை கொண்டாடிய நல்ல கண்ணுவிற்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 மாதமாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நல்ல கண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். கம்யூனிஸ்ட் தலைவர்களும், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நல்லகண்ணுவின் உடல் நலம் குறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் கூறும் போது, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வெண்டிலேட்டர் உதவியுடன் அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது என்றனர்.
நல்லகண்ணுவின் உடல் நலம் பற்றிய தகவல் அறிந்தவுடன் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.
தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீர பாண்டியன் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நல்ல கண்ணுவின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஆஸ்பத்திரியின் மருத்துவ அறிக்கையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார்.
- ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
- மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 20-ந்தேதி காலை இவர் கல்லூரி பஸ்சை மதுபோதையில் ஓட்டிச்சென்றபோது நெல்லை-கடையம் சாலையில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகத்தில் மோதினார்.
இதில் ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவரான சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்த மனக்காவலம் பெருமாள் (49)மற்றும் சுத்தமல்லி அருகே பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த யஸ்வனி (15), பழவூர் கிராமத்தை சேர்ந்த செல்வபாலா (15) மற்றும் 10-ம் வகுப்பு மாணவன் முத்து அருள்(15) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தொடர்ந்து 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி செல்வபாலாவின் உடல்நிலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சுமார் 4 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாணவியின் உயிரை காப்பாற்ற போராடிய நிலையில் செல்வபாலா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி கொலையாகாத மரணம் விளைவிக்க முயற்சி என வழக்குப்பதிவு செய்து டிரைவர் இசக்கியப்பனை கைது செய்திருந்த நிலையில், தற்போது மாணவி இறந்துவிட்டதால் கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கை மாற்றம் செய்துள்ளனர்.
- நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. 2 அருவிகளிலும் பெரிய அளவில் தண்ணீர் விழவில்லை என்றாலும், பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் அதிகரித்து விழுந்தது.
சில மாதங்களுக்கு முன்பு கனமழை காரணமாக பழைய குற்றால அருவி பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் அங்கு 3 மாதங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தற்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் நீர் விழுந்து வருவதால் விரைந்து சீரமைப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
- விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
- ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பதட்டமான தொகுதிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுவது வழக்கம்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இப்படி அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தீவிரமாகி வரும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். இதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் நாளை தமிழகம் வருகிறார்கள்.
இந்த அதிகாரிகள் நாளை முதல் 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கி இருந்து சட்டசபை தேர்தலை நடத்துவதற்கானஅனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையில் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பதட்டமான தொகுதிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுவது வழக்கம்.
முதல் கட்டமாக 50 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் (மார்ச்) 10-ந்தேதி தமிழகம் வருகை தர உள்ளனர். இதன் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மேலும் பல கம்பெனி துணை ராணுவ படையினரும் தமிழகத்துக்கு வருகை தர இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அடுத்த மாதம் வருகை தர உள்ள துணை ராணுவ படையினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட இருக்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாகத்தான் மற்ற மாநிலங்களைப் போன்று இல்லாமல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நாளை தமிழகம் வருகை தரும் தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பிறகு அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்கத்கது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுகிறார்கள்.
இதன் மூலம் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நேற்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்குப்போட்டியாக நேற்று உயர்ந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360
19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
22-02-2026- ஒரு கிராம் ரூ.290
21-02-2026- ஒரு கிராம் ரூ.290
20-02-2026- ஒரு கிராம் ரூ.270
19-02-2026- ஒரு கிராம் ரூ.270
- இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி டேவிட் என்பவரின் படகில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21-ந் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பனில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாம்பன் துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் 100-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பாம்பனில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
- இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
- ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
கோவையில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கூட மாநில அரசு அந்த உத்தரவை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அதை தடுத்து நிறுத்தினார்கள்.
சட்டம் ஒழுங்கு என்ற ஒரு பொய் காரணத்தை சொல்லி தீபத் திருநாள் அன்று தீபம் ஏற்றுவதை தடுத்தது இந்த தி.மு.க. அரசு.
தமிழகம் எப்போதும் தெய்வீக மண். இங்கு இருக்கக்கூடிய கோவில்கள், இறை தெய்வங்கள், கோவிலையொட்டி இருக்கக்கூடிய கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தான் தமிழர்களுடைய அடையாளம்.
தமிழ்நாடு என்றாலே ஒரு கோபுர சின்னத்தை வைத்தது நம் முன்னோர்கள். கோபுர சின்னம் கோவிலின் அடையாளம் என்பதை தாண்டி அது தமிழகத்தின் அடையாளமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற விதமாக திராவிட மாடல் தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் திருப்பரங்குன்றத்தில நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு காரணம். நீதிமன்றத்தில் போய் வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்டது தி.மு.க. அரசு. அவர்களுடைய நோக்கம் என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும். இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஊழல்வாதிகளை மிரட்டி தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளாரே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை மாதம் ஆகிறது. அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா?
அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் குற்றச்சாட்டிற்காக ஒரு சிட்டிங் அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
தி.மு.க. கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் கூறியிருக்கிறாரே?
விஜய் எந்தவிதமாக புதுபுது வார்த்தைகள் வைத்து பேசினாலும் அல்ட்டிமேட்டா தி.மு.க.வை வீழ்த்தப்போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான். அதனால் மேடை ஏறலாம். வசனம் பேசலாம். கூட்டத்தை கூட கூட்டிக்காட்டலாம். ஆனால் வாக்குகள் விழுவது என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். ஏனென்றால் அவர்களை வீழ்த்த முடிகின்ற சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம்.
- திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






