என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கடைகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
- கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து கடைகளையும் கடந்த ஜனவரி 29-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தது.
மதுரை:
கன்னியாகுமரியில் இயங்கி வரும் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தங்கராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி திருவேணி சங்கமம் கடற்கரை மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஏராளமானவர்கள் கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் கன்னியாகுமரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அந்த கடைகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து கடைகளையும் கடந்த ஜனவரி 29-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி சுனாமி பூங்கா அருகில் தரை வாடகை கடை வைத்து வியாபாரம் செய்து வரும் தமிழ்செல்வம், வரீது உள்பட 24 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், மாதந்தோறும் தரை வாடகையை கோவில் அலுவலகத்தில் செலுத்துவதாகவும், ஐகோர்ட்டு உத்தரவை கூறி எங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு, அங்கு உள்ள நிரந்தர கட்டுமானங்களில் செயல்பட்ட கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். காலி இடத்தில் வியாபாரம் செய்து வரும் மனுதாரர்கள் 24 பேரின் கடைகளை கட்டுப்படுத்தாது. மனுதாரர்களின் நலனை இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு எந்த வகையிலும் பாதிக்காது என்று நீதிபதி அறிவுறுத்தி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
- தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார்.
மாநிலங்களவையில் ஆற்றிய முதல் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கூறி தொடங்கிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். கடைசியில் தமிழில் முடித்தார். தமிழில் அவர் பேசியது தற்போது கவனம் ஈர்த்துவருகிறது.
தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், "நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது.
இதனை தான் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் பேச்சை ஒட்டி நிர்மலா சீதாராமனை விமர்சித்து சினேகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நேற்று மாநிலங்களவில் கமல்ஹாசன் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்க உரை. அந்த உரையை கேட்டதில் இருந்து வியந்து பொய் அந்த வியப்பில் இருந்து எழுபடாமலேயே இருக்கிறேன். நான் மட்டும் அல்ல, லட்சோப லட்ச மக்கள் வியந்து கொண்டும் புகழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். எங்கிருந்து பேசினால் இந்த உலகத்தின் காதில் விழுமோ அங்கிருந்து பேசியிருக்கிறீர்கள்
- ரூ.34,237 கோடியில் செயல்படுத்தப்படும் 15 புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஹூண்டாய் நிறுவனத்திற்கான விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* ரூ.34,237 கோடியில் செயல்படுத்தப்படும் 15 புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* ஹூண்டாய் நிறுவனத்திற்கான விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
- திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.
- கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.3511.13 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.1267.62 கோடி மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரிய அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.47 லட்சம் மதிப்பிலான 5 வாகனங்களை வழங்கினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும், நகராட்சி நிர்வாக இயக்கு நரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும், திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகள் என மொத்தம் 1,267.62 கோடி மதிப்பில் 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள் மற்றும் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1070 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 11 ஊராட்சிகளுக்கு 1138.41 கோடி ரூபாய் செலவிலான 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களை சார்ந்த 363 ஊரகக் குடியிருப்புகளுக்கு 515.72 கோடி ரூபாய் செலவிலான கூட்டு குடிநீர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு 44.58 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்தை சார்ந்த கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளில் உள்ள 24 ஊரகக் குடியிருப்புகளுக்கு 7.06 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தை சார்ந்த வடசேரி மற்றும் 17 குடியிருப்புகளுக்கு 4.95 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்;
என மொத்தம் 1724 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 11 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு 62.82 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் 653 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 4 லட்சத்து 49 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 2 பாதாள சாக்கடைத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் (செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை) ஆகிய பகுதிகளில் 74 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிலான குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 68 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சோழிங்கநல்லூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கத்தில் 17 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூரில் 45 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை), மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) ஆகிய மண்டலங்களில் 188 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்.
மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு 106 கோடி 42 லட்சம் செலவில், பாடி மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள்.
தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 134 கோடி 33 லட்சம் செலவில், கழிவுநீர் உந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள் உள்ளிட்ட கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 635 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் மண்டலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே இரயில்வே காலனி 3-வது தெருவையும், மாதா கோயில் தெருவையும் இணைக்கும் வகையில் 1.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், மாதவரம் மண்டலம், விநாயகபுரத்தில் 1.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், எம்.ஆர்.எச். சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ் கான் சாலையோரத்தில் 19.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகளுக்கான நடைபாதை வளாகம் ஆகியவை திறக்கப்பட்டன.
மணலி மண்டலத்தில் ரூ.19.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 பள்ளிக் கட்டடங்கள், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் வளாகத்தில் 1.82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம். மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் ரூ.6.29 கோடி செலவில் 10 புதிய மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் 2 புதிய நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் ரூ.1.37 கோடி செலவில் 5 புதிய பூங்காக்கள், ரூ. 13.43 கோடி செலவில், அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் 9 புதிய குளங்கள். மேலும், ரூ.2.64 கோடி செலவில் தண்டையார்பேட்டை மற்றும் பெருங்குடி மண்டலத்தில் 3 விளையாட்டு திடல்கள், ரூ. 1.24 கோடி செலவில், அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள். ரூ.9.13 கோடி ரூபாய் செலவில், மணலி, அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் 6 எரிவாயு தகன மேடைகள் என மொத்தம் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 200 அடி சாலையில் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம், மணலி மண்டலம், செட்டிமேடு பகுதியில் 6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளரங்க கபடி மைதானம் மற்றும் திறந்தவெளி கால்பந்து மைதானம், மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் பகுதியில் 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகம், மாதவரம் மண்டலம், திருவள்ளுவர் தெரு, புத்தகரத்தில் 4.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகங்கள்.
ரூ.9.54 கோடி மதிப்பீட்டில், மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக வசதிகளுடன் கூடிய 2 பூங்காக்கள் என 4 பூங்கா மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.
புழலில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 555 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 310 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட நிலையமாக மறுசீரமைத்து மேம்படுத்தும் பணிகள் 376 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அடையாறு மண்டலம், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செயல்படுத்தும் பணிகள் என மொத்தம் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிடும் வகையில் அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமை செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ரெயிலில் வருகை மற்றும் புறப்பட நேரங்களை துல்லியமான மற்றும் உடனடித் தகவலுடன் காட்டுகின்றன.
- அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைத்துள்ளன.
பயணிகள் வசதியை மேம்படுத்தவும் ரெயில் வருகை மற்றும் புறப்படும் நேரம் விவரங்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளது.
வேளச்சேரி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவான்மியூர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மீஞ்சூர், தாம்பரம், சானடோரியம், கோட்டை, திருவொற்றியூர், கொரட்டூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி ஜீவா, தரமணி, திரிசூலம், அண்ணனூர், பட்டர வாக்கம், திருமயிலை, மீனம் பாக்கம், பெரம்பூர், லோகோ ஒர்க்ஸ் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம்.
சிந்தாதிரிப்பேட்டை, அத்திப்பட்டு, கஸ்தூரிபாய் நகர், பெருங்குடி, அனுப்பம்பட்டு, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, மந்தைவெளி, கோட்டூர்புரம், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் கிரீன்வேஸ் சாலை, கத்திவாக்கம், இந்திரா நகர், அத்திப்பட்டு புதுநகர், முண்டக்கண்ணி அம்மன் கோவில், ராயபுரம், பேசின் பாலம், பொன்னேரி, விம்கோ நகர், ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் நந்தியம்பாக்கம் ஆகிய 48 ரெயில் நிலையங்களில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ரெயிலில் வருகை மற்றும் புறப்பட நேரங்களை துல்லியமான மற்றும் உடனடித் தகவலுடன் காட்டுகின்றன. மேலும் ரெயில் எண்கள் இலக்கு நிலையங்கள் பிளாட்பாரம் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவை தெளிவாக காட்டப்படுகிறது. அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி. திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிக நெரிசல் நேரங்களிலும் மற்றும் பல்வேறு வெளிச்ச நிலைகளிலும் கூட இந்த பலகைகள் தெளிவாக காணப்படுகின்றன. இந்த முயற்சி தினசரி பயணிகள், முதியவர்கள் மற்றும் முதன்முறையாக பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
- அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.
- நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.
கோவை:
கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் இந்த முறை தொகுதி மாறி போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வந்தது.
அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுவதால் இந்த தொகுதியில் தற்போது நான் அதிக கவனம் செலுத்துவதாக கூறுவது தவறு.
எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.
இதற்கு முன்பும் கோவை வடக்கு தொகுதியில் மட்டுமல்ல அனைத்து தொகு திகளிலும் நாங்கள் பணிகள் செய்துள்ளோம். உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது.
நான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை தான் அறிவிக்கும்.
எங்களை பொறுத்தவரை முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அவர் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை.
நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.
அவர் பேசியது ஒன்றும் புரியாததால் தான் அவரை கோவை மக்கள் இங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை திராவிட மாடல் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
- விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
* சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
* நாளை முதல் பிப்ரவரி 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.
* விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
* பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.15 ஆயிரமாகவும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.
- மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும். தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரையில் நீடிக்கிறது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவையும் மழையில் நனைந் தது போல் ஆகிவிடுகின்றன.
காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைத்துக் கொண்டும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டும் செல்லும் நிலை உள்ளது.
இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, பனிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்து வெயில் காலம் தொடங்கும். இதற்கு அறிகுறியாகவே வெயில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என கூறி உள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் வெயில் பாதிப்பை விட பனி பாதிப்பே அதிக அளவில் உள்ளது.
இரவு நேரத்தில் அதிக அளவில் கொட்டும் பனி காரணமாக வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோர் சளித் தொல்லையாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சுவாசப் பிரச்சனையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பனியின் தாக்கம் கூடுதல் பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் பொது மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை எடுப்பதற்கும் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
இந்தப் பனிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து கடுமையான வெயில் வாட்டி எடுக்க உள்ள சூழலில் தேர்தல் களமும் அப்போது சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.
- இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தில் பூ விவசாய குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார்-மாலியபுரம் தம்பதியினருக்கு அஸ்வினி மற்றும் தாமோதரன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தாய் மாலியபுரம் உடன் பிறந்த சகோதரர் வேல்முருகன், தனது சகோதரி குழந்தைகளுக்கு காதணி விழா செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களுடன் எ.காமாட்சிபுரத்திலிருந்து எ.கொங்கப்பட்டி கிராமத்திற்கு சுமார் 4 கி.மீ. தூரம் 20-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.
இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும் இரட்டை சீர் என்று சொல்லக்கூடிய பித்தளை பானை, அண்டா, பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் இரட்டை எண்ணிக்கையில் சீராகவும், உப்பு, மிளகாய், மஞ்சள் பொடி, இரட்டை மாலை, இனிப்பு, கார வகைகள் என அனைத்தும் பாரம்பரியம் மாறாமல் சீர்வரிசையாக கொண்டு வந்தார்.
தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு தமிழர் கலைகளுடன் தாரை தப்பட்டை, வான வேடிக்கை சகிதம் ஆட்டுக்கிடாய், வெள்ளி பாத்திரங்களுடன் காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெண் குழந்தையான அஸ்வினிக்கு 5 பவுனில் தோடு அணிவித்துள்ளார். நிறைவாக சம்பிரதாயப்படி அசைவ விருந்து வழங்கப்பட்டு மொய் வாங்கப்பட்டு காதணிவிழா நடைபெற்றது. சொந்த பந்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வரும் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
- இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.
இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் வரும் 11-ந்தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழ்நாடு வர உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
- செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இறந்து போன காகங்களின் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் எனவும் கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது.
- 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார்.
கோவை:
தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுவாக தமிழக மக்கள் இரண்டு இயக்கங்களே தமிழகத்தை ஆள வேண்டுமா? என்று சிந்தித்து வருகின்றனர். புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மக்கள் புதிய தலைமையை முடிவு செய்து விட்டனர். அந்த நோக்கத்தோடு எங்களது தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு வருகிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜயை பற்றி மற்ற கட்சிகள் கருத்து சொல்வதற்கு காரணம், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை ஒவ்வொரு இயக்கங்களும் மாறி மாறி கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேர் தமிழகத்தில் தேர்தல் எப்போது நடக்க போகிறது என்பதற்காக பதிவு செய்து, காத்திருக்கும் வரலாறு இந்திய வரலாற்றில் இடம் பெறப்போகிறது.
புதிய தலைமை ஆளவேண்டும். அதுவும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்.
அ.தி.மு.க வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தி.மு.க.வை தான் பேச வேண்டும். இதில் இருந்தே பி டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.
அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தோல்வி பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட காரணத்தால் தான் இப்படி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்க வேண்டியது. ஆனால் தோல்வி பயம் வந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என்றார்.






