என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் திடீர் வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன?: வானிலை ஆய்வு மைய அதிகாரி விளக்கம்
- பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது.
- மேற்கு திசையில் இருந்து காற்று வர வர வெப்பம் குறையும்.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வெப்பம் பொதுவாக குறைந்து காற்று வீசக்கூடும். ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்தது.
பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய வெயில் இதுவரையில் சுட்டெரித்து வருகிறது. 4 மாதமாக தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் வெயிலின் தாக்கம் ஏன் அதிகமாக உள்ளது அதற்கான காரணம் என்ன என வானிலை மைய அதிகாரி கீதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-
பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுக்கிறது. அதனால் கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.
தற்போது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் வடமேற்கு திசையில் இருந்து வருகிற காற்று தடைபட்டுள்ளது. நிலப்பகுதியில் இருந்துதான் காற்று வருகிறது. இவ்வாறு வரும்போது இடி-மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆனால் அந்த மழையும் பெய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வரவர வெப்பம் குறையும். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று இல்லாததால் தான் வெயில் இயல்பை விட அதிகரித்தது. இனி வெப்பம் படிப்படியாக குறையும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்று வெயில் தாக்குவது இயல்பான ஒன்றுதான். இது ஒன்றும் புதியது அல்ல. தமிழகத்தில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்