search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

    • பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர்.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ள பாதிப்புகளில் பெருமளவு பாதிக்கப்பட்ட சென்னை அதில் இருந்து மெல்ல மீள தொடங்கி இருக்கிறது.

    கடந்த திங்கள் கிழமை அன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர்.


    கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயசீலன் கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். இவருடன் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஜெயசீலன் மற்றும் சிலரை மீட்கும் பணிகள் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மற்றவரின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் மீட்பு பணிகளில் எல் அண்ட் டி, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×