search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முடிவுக்கு வரும் தொடர் விடுமுறை.. நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
    X

    முடிவுக்கு வரும் தொடர் விடுமுறை.. நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நாளை (டிசம்பர் 08) சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன் தூய்மை, மின் இணைப்பு என தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    Next Story
    ×