என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை சிகிச்சை- கேரளாவில் ரகசியமாக நடப்பதாக தகவல்
- மூலிகை சிகிச்சையின் மூலம் மன அழுத்தங்கள் குறைந்து உடலும் புத்துணர்ச்சி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவுக்கு மூலிகை சிகிச்சைக்கு சென்றதை ஓ.பன்னீர் செல்வம் ரகசியமாக வைத்துள்ளார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாக ஆண்டுதோறும் கேரளாவுக்கு சென்று பாரம்பரிய மூலிகை சிகிச்சை எடுத்துக்கொள்வது வழக்கம்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சட்ட போராட்டங்கள் நடத்துவது, தொடர் ஆலோசனைகள் என்று எப்போதும் மிகவும் பிசியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தற்போது மூலிகை சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். 10 நாட்கள் அங்கு தங்கி இருந்து விட்டு சிகிச்சை எடுத்துவிட்டு சென்னை திரும்புகிறார். இந்த சிகிச்சையின் மூலம் மன அழுத்தங்கள் குறைந்து உடலும் புத்துணர்ச்சி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவுக்கு மூலிகை சிகிச்சைக்கு சென்றதை ரகசியமாக வைத்துள்ளார். அவர் கேரளாவுக்கு கோவிலுக்கு சென்றுள்ளார். பெங்களூர் சென்றுள்ளார் என்று கட்சியினர் மாறுபட்ட தகவல்களை தெரிவிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்