search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 135 புதிய நிர்வாகிகள் நியமனம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
    X

    செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 135 புதிய நிர்வாகிகள் நியமனம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

    • ஊரப்பாக்கம் ஊராட்சி 1-வது வார்டு அவைத் தலைவராக சுந்தரம், செயலாளராக வெங்கடேசன், இணைச் செயலாளராக சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • காயத்ரி நகர் கிளை அவைத் தலைவராக சசிகுமார், செயலாளராக கிருஷ்ணவேணி, கணபதி நகர் கிளை அவைத் தலைவராக பாஸ்கர், செயலாளராக சுரேஷ் உள்பட மொத்தம் 135 பேர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்கு 135 புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊரப்பாக்கம் ஊராட்சி 1-வது வார்டு அவைத் தலைவராக சுந்தரம், செயலாளராக வெங்கடேசன், இணைச் செயலாளராக சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    துணை செயலாளர்களாக நித்தியா, கண்ணன், பொருளாளராக குமார் மேலமைப்பு பிரதிநிதிகளாக கவிதா, பாலாஜி, ரவி, செல்லியம்மன் நகர் கிளை அவைத் தலைவராக பாலு, செயலாளராக அருள், இணைச் செயலாளராக புஷ்பா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காயத்ரி நகர் கிளை அவைத் தலைவராக சசிகுமார், செயலாளராக கிருஷ்ணவேணி, கணபதி நகர் கிளை அவைத் தலைவராக பாஸ்கர், செயலாளராக சுரேஷ் உள்பட மொத்தம் 135 பேர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×