search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில்களில் நடந்து வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு- அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது
    X

    கோவில்களில் நடந்து வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு- அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது

    • மாரியம்மன் கோவிலில் ரூ.68.30 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய மற்றும் முன்னோடித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலில் ரூ.170.11 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.306.35 கோடி மதிப்பீட்டிலும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ரூ.159.83 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ரூ.78.20 கோடி மதிப்பீட்டிலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.103.70 கோடி மதிப்பீட்டிலும், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் ரூ.64.65 கோடி மதிப்பீட்டிலும், கடலூர், அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டிலும், பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.99.98 கோடி மதிப்பீட்டிலும், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் ரூ.78.55 கோடி மதிப்பீட்டிலும், இருக்கண்குடி, மாரியம்மன் கோவிலில் ரூ.68.30 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    2023 - 2024 -ம் ஆண்டு அறிவிப்புகளின்படி, அழகர்கோவில், கள்ளழகர்கோவில், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில், சிறுவாபுரி, பால சுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர், அங்காளபரமேஸ்வரி கோவில், திருச்சி மாவட்டம், குமாரவயலூர், சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் ரூ. 200 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், சிறப்பு திட்டங்களான தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணி மண்டபம் அமைத்திடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினம், ஔவையார் விஸ்வநாத சுவாமி கோவில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவில் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மனநல காப்பகம், வான்புகழ் வள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மயிலாப்பூர், திருவள்ளுவர் கோவில் திருப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பழனி, தண்டாயுத பாணிசுவாமி கோவில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கு ரூ.34 கோடி மதிப்பீட்டிலும், கோவை மாவட்டம், அனு வாவி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.14.80 கோடி மதிப்பீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் கோவிலுக்கு ரூ.9.50 கோடி மதிப்பீட்டிலும் கம்பிவட ஊர்தி அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    Next Story
    ×