search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் கணவனை காணாமல் தேடி கண்ணீர் விட்ட மனைவி
    X

    ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் கணவனை காணாமல் தேடி கண்ணீர் விட்ட மனைவி

    • கல்லூரியில் கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவில் உத்தண்டி குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
    • ஊருக்குள் நுழைந்த அவர் ஊருக்குள் முட்டளவுக்கு கடல் நீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னை:

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாமல்லபுரம் அருகேயுள்ள உத்தண்டி குப்பம் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஊருக்குள் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் கல்லூரியில் கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவில் உத்தண்டி குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். ஊருக்குள் நுழைந்த அவர் ஊருக்குள் முட்டளவுக்கு கடல் நீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தனது கணவரின் நிலைமை என்ன ஆனதோ, அவர் எங்கே போனாரோ தெரியவில்லை என பதறியடித்தபடி கண்ணீர்விட்டு அழுதார்.

    ஆனாலும் அவர் கண்ணீர்விட்டு கதறிய படியே தனது வீட்டை நோக்கி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று கணவரை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பத்திரமாக நிவாரண முகாமில் கொண்டு சேர்த்தனர்.

    Next Story
    ×