என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் கணவனை காணாமல் தேடி கண்ணீர் விட்ட மனைவி
- கல்லூரியில் கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவில் உத்தண்டி குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
- ஊருக்குள் நுழைந்த அவர் ஊருக்குள் முட்டளவுக்கு கடல் நீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை:
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாமல்லபுரம் அருகேயுள்ள உத்தண்டி குப்பம் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஊருக்குள் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில் கல்லூரியில் கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவில் உத்தண்டி குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். ஊருக்குள் நுழைந்த அவர் ஊருக்குள் முட்டளவுக்கு கடல் நீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தனது கணவரின் நிலைமை என்ன ஆனதோ, அவர் எங்கே போனாரோ தெரியவில்லை என பதறியடித்தபடி கண்ணீர்விட்டு அழுதார்.
ஆனாலும் அவர் கண்ணீர்விட்டு கதறிய படியே தனது வீட்டை நோக்கி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று கணவரை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பத்திரமாக நிவாரண முகாமில் கொண்டு சேர்த்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்