search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மந்தைவெளியில் கோவில் திருவிழா மோதலில் வாலிபர் படுகொலை
    X

    மந்தைவெளியில் கோவில் திருவிழா மோதலில் வாலிபர் படுகொலை

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்தனர்.
    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது32). ஏசி மெக்கானிக். நேற்று இரவு அவர் மந்தவெளி ரெயில் நிலையம் அருகில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்றார். இரவு சாமி ஊர்வலம் நடை பெற்ற போது தினேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×