என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மந்தைவெளியில் கோவில் திருவிழா மோதலில் வாலிபர் படுகொலை
ByMaalaimalar11 Sep 2023 9:44 AM GMT
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்தனர்.
- மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது32). ஏசி மெக்கானிக். நேற்று இரவு அவர் மந்தவெளி ரெயில் நிலையம் அருகில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்றார். இரவு சாமி ஊர்வலம் நடை பெற்ற போது தினேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X