search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒற்றை யானை முன்பு அலட்சியமாக நடந்து செல்லும் நபர்
    X

    ஒற்றை யானை முன்பு அலட்சியமாக நடந்து செல்லும் நபர்

    • காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி இறங்கி வரும் ஒற்றை யானை முன்பு ஒரு நபர் அலட்சியமாக நடந்து செல்கிறார்.
    • யானையை பார்த்ததும் அச்சப்படாத நபர் யானையை நோக்கி கைக்கூப்பி கும்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது.

    யானை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், சில வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், வனத்துறை அதிகாரிகளான சாகேத் படோலா மற்றும் ரமேஷ் பாண்டே ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அதில், காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி இறங்கி வரும் ஒற்றை யானை முன்பு ஒரு நபர் அலட்சியமாக நடந்து செல்கிறார். யானையை பார்த்ததும் அச்சப்படாத அந்த நபர் யானையை நோக்கி கைக்கூப்பி கும்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் சம்பந்தப்பட்ட நபரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற எரிச்சலூட்டும் நபர்களை சகித்து கொள்வது எளிதானது அல்ல. இதனால் தான் அவர்கள் மென்மையான ராட்சதர்களாக மதிக்கப்படுகிறார்கள் என்று படோலா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×