search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுச் செயலாளர் யார் வேண்டுமானாலும் வரட்டும் எனக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவி வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. சொல்கிறார்
    X

    பொதுச் செயலாளர் யார் வேண்டுமானாலும் வரட்டும் எனக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவி வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. சொல்கிறார்

    • 2001ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
    • எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் உள்ளேன்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன். இவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2001ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அவர் தனக்கு அ.தி.மு.க.வில் அவைத்தலைவர் பதவி வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தலைமை பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் சரி எனக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன்.

    எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் உள்ளேன். தேவேந்திரகுல வேளாளர் சமூதாயத்தை சேர்ந்த எனக்கு இந்த பதவியை வழங்கினால் இந்தசமூதாய மக்களை பெருமைப்படுத்தும் வகையில் அமையும். எனவே இந்த பதவியை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளேன் என்றார்.

    Next Story
    ×