என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாவட்டம் தோறும் மாலை நேர உழவர் சந்தை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி திறந்து வைக்கிறார்
- உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பயிறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
சென்னை:
கருணாநிதி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகள் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கண்டு கொள்ளாமல் கிடந்தது.
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்ததும் உழவர் சந்தைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பாழடைந்து கிடந்த உழவர் சந்தைகள் புதுப்பொலிவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இப்போது இந்த உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாலை நேர உழவர் சந்தை மாவட்டத்துக்கு 1 வீதம் 37 மாவட்டங்களிலும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த உழவர் சந்தைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந்தேதி திறந்து வைக்கிறார்.
இங்கு பயிறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் மாலை நேர உழவர் சந்தைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மற்ற ஊர்களில் 12-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்