search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் பண்டிகை... சென்னையில் பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகை... சென்னையில் பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

    • துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் 8000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை இரவு முதல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் 8000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×