search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 13 இடங்களில் பிரமாண்ட நடைபாதை பிளாசா- நடக்கவும், சைக்கிளில் செல்லவும் தனிப்பாதை
    X

    சென்னையில் 13 இடங்களில் பிரமாண்ட நடைபாதை 'பிளாசா'- நடக்கவும், சைக்கிளில் செல்லவும் தனிப்பாதை

    • ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் நடைபாதைகள் சரி செய்யப்பட வேண்டும்.
    • சில குடியிருப்போர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் மாநகராட்சி தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றனர்.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் உள்ளது போல நடைபாதை பிளாசா 13 இடங்களில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவி உடன் இத்திட்டத்தை செயல்படுத்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    மிகப்பெரிய தெருக்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பழைய வண்ணாரப்பேட்டை முதல் புதிய வண்ணாரப்பேட்டை வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபாதை பிளாசா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது போல மாலை பஜார், ரத்தன் பஜார் சாலை, அண்ணாநகர் 3-வது அவென்யூ, கீழ்ப்பாக்கம் கார்டன் ஆகிய சாலைகளை சென்னை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது.

    மேலும் புல்லா அவென்யூ, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-கதீரட்ரல் ரோடு, எல்டம்ஸ் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, கால்வாய் வங்கி சாலை, மேற்கு கால்வாய் வங்கி சாலை, தாலுகா அலுவலக சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, சாஸ்திரி நகர் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-கதீட்ரல் சாலை 3.5 கி.மீ. அண்ணா நகரில் 2.4 கி.மீ., புல்லா அவனெ்யூ 1.5, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை-1.3, எல்டம்ஸ் சாலை 1 கி.மீ., மாலை பஜார் மற்றும் ரத்தன் பஜார் சாலை .7 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை பிளாசாக்கள் அமைக்கப்படுகிறது.

    நடைபாதை பிளாசா மொத்தம் 50 கி.மீ. தூரத்திற்கு அமைகின்றன. இந்த பாதையில் நடந்து செல்வதற்கு இடம், சைக்கிளில் செல்ல தனி வழி, பார்க்கிங் வசதி, சில இடங்களில் இரு வழி வண்டிப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கி நடைபாதை பிளாசாக்கள் உருவாக்கப்படுகிறது.

    பொதுமக்கள் இந்த நடைபாதை பிளாசாவை பல்வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. பொது மக்கள் செல்லும் பாதையை வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறுகையில், இது போன்ற திட்டங்களுக்கு மாநகராட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் நடைபாதைகள் சரி செய்யப்பட வேண்டும். பாதசாரி பிளாசாக்கள் அதிக செலவை கொண்ட திட்டங்கள் மற்றும் பெரும்பாலான சாலைகளில் பாதைகள் இல்லை. அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    மரங்கள் நிறைந்த இடங்களில் வெளியில் இருப்பது அனைவரின் குறிப்பாக குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இத்தகைய பிளாசாக்கள் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் வெளியில் இருப்பதை அனுபவிக்க வாய்ப்பு அளிக்கின்றன என்று சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றனர்.

    ஆனாலும் சில குடியிருப்போர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் மாநகராட்சி தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×