search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: பிற்பகலில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை
    X

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: பிற்பகலில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் நலன்கருதி தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு முறையிடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் படி அரசுக்கு உத்தரவிடக்கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்தால் இதுசம்பந்தமான அவசர வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து இவ்வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×