என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை வானகரத்தில் மீண்டும் நடத்த முடிவு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை வானகரத்தில் மீண்டும் நடத்த முடிவு](https://media.maalaimalar.com/h-upload/2022/06/29/1720624-eddd.jpg)
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை வானகரத்தில் மீண்டும் நடத்த முடிவு
![Suresh K Jangir Suresh K Jangir](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொதுக்குழுவில் இதுபற்றி முடிவு செய்ய வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஜெயின் கல்லூரி வளாகத்தில் அரசியல் கூட்டம் நடத்த உயர் கல்வித் துறை அனுமதிக்காது என்பதால் அந்த இடம் கைவிடப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ந்தேதி வானகரத்தில் பொதுக்குழுவை கூட்டி இருந்தார்.
ஆனால் அந்த கூட்டத்தில் கோர்ட்டு உத்தரவு காரணமாக ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியவில்லை. அதற்கு மாறாக அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அன்றைய தினம் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்க முடியவில்லை.
அடுத்த பொதுக்குழுவில் இதுபற்றி முடிவு செய்ய வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுக குழு கூட்டத்தை எங்கே நடத்துவது என்று சில நாட்களாக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தீவிரமாக இடம் பார்த்து வந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. கடற்கரை வளாகம், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகம், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒரு 'ரிசார்ட்' ஆகிய இடங்களை பொதுக்குழு நடத்த பார்வையிட்டனர்.
இதில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் அரசியல் கூட்டம் நடத்த உயர் கல்வித் துறை அனுமதிக்காது என்பதால் அந்த இடம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு வி.ஜி.பி. வளாகத்தில் பொதுக் குழுவை நடத்தலாமா? என்று ஆலோசித்தனர். ஆனால் அந்த பகுதி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வருவதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடைசி நிமிடத்தில் பொதுக்குழுவை நடத்த முடியாமல் போகலாம் என கருதினர். இதனால் அந்த இடமும் கைவிடப்பட்டது.
இதனால் கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மண்டபத்தின் உரிமையாளரை அணுகி தகவல் தெரிவித்துள்ளனர்.
வருகிற 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு நடத்துவதற்கு மண்டபத்தை தாருங்கள் என்று கேட்டுள்ளனர். ஒருவேளை இந்த தேதி மாறினாலும் வேறொரு தேதியில் நடத்துவதற்கு வசதியாக மேலும் 2 தேதிகளில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தை அ.தி.மு.க. தரப்பில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)