search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு போர்பே அணையில் தமிழக பொறியாளர்கள் ஆய்வு
    X

    முல்லைப்பெரியாறு போர்பே அணையில் தமிழக பொறியாளர்கள் ஆய்வு

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது.
    • கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தேக்கடியில் உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நீர் 2 கி.மீ தூரம் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்று குமுளி மலைப்பாதை அருகே போர்பே அணையில் சேரும். அங்கிருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலமும், இரைச்சல் பாலம் வழியாகவும் வெளியேற்றப்படும்.

    இந்த அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு வைகை செயற்பொறியாளர் அன்புச் செல்வன், பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. வரத்து 88 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 4590 மி.கன அடி.

    வைகை அணை நீர்மட்டம் 54.66 அடி. வரத்து 286 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2664 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.70 அடி. வரத்து 58 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.44 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 6 கன அடி.

    லோயர்கேம்ப், கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×