search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவிதாங்கோடு அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா உடைப்பு
    X

    திருவிதாங்கோடு அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா உடைப்பு

    • நேற்று இரவு பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் 4 சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்துள்ளனர்.
    • மாணவர்கள் பள்ளி சுவர் ஏறி குதித்து 2 வகுப்பறைக்கு பூட்டு போட்டுள்ளனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்த காரணத்தால் இங்கு 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பூட்டு போடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் 4 சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர் பள்ளி சுவர் ஏறி குதித்து 2 வகுப்பறைக்கு பூட்டு போட்டுள்ளனர். இன்று பள்ளி சென்ற மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுசம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மற்ற கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு வரவழைத்து விசாரணை செய்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×